பக்கம் எண் :

236குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

தாமாத றெளிவிப்பார் போலு நீலத்
   தரங்கநெடுங் கடன்ஞால மொருங்கு வாய்த்த
கோமாது மனங்குழையக் குழைந்த வாரூர்க்
   குழகனார் கிண்கிணிக்கா லழக னாரே.    
(20)

நேரிசை யாசிரியப்பா
328.
அழவிலர் சோதி முழுவெயி லெறிப்ப
இளநில வெறிக்குங் குளிர்மதிக் குழவியும்
வெஞ்சினம் பொதிந்த நஞ்சுமிழ் பகுவாய்
வெள்ளைமுள் ளெயிற்றுப் பிள்ளைவா ளரவும்
5
தெண்டிரை கொழிக்குந் தீம்புன்ற் கங்கைத்
தண்டுற் மருங்கிற் றனுவிளை யாட
உடன்வைத் தாற்றிய படர்சடைக் கடவுள்
எறுழ்வலித் தறுகட் டெறுசினக் கேழல்
முளையெயி றிலங்க முருகுகொப் புளித்துத்
10
தளையழி ழிதழித் தண்டார் மார்ப
திருவிழி இரண்டிலு மிருசுடர் வழங்கலின்
இரவுநன் பகலு மொருபுடை கிடந்தெனக்
கடங்கலுழ் கரடத் தடங்களிற் றுரிவையும்

வைத்து எண்ணப்படும் திருமால். ஒருங்கு வாய்த்த - ஒருங்கே கருப்பத்தில் வாய்த்த. கோ மாது - உமாதேவியார். குழகனார் - இளமையையுடையவர். கிண்கிணிக் கலழகனார்; தியாகேசர் திருநாமம்.

    328. சிவபெருமானைத் தேவருள் ஒருவராக வைத்து எண்ணுதல் பிழை என்பர்.

    (1-7) அழலவிர் சோதி - சிவபெருமானிம் திருமேனிச் சோதி; சடையின் சோதியுமாம். ஆற்றிய - சுமந்த. ஒன்றையுன்று பகைக்கும் இயல்பையுடைய சந்திரனையும் பாம்பையும் உடன்வைத்தாயென்றது ஒரு நயம். மதிக்குழவி, பிள்ளை வாளரவென்றதற்கேற்ப விளையாடவென்றார்.

    (8-10) எறுழ்வலி - மிக்க வன்மை. கேழல் முளைஎயிறு இலங்க. பன்றியின் மூங்கில்முளைபோன்ற கொம்பு விளங்க. முருகு - நறுமணம். தறையவிழ் இதழி - முறுக்கவிழ்ந்து மலர்ந்த கொன்றை. பன்றிக்கொம்பு பிறைபோன்றிருத்தலின் அதுகண்டு கொன்றை மலர்ந்தது.

    (11-15) இருசுடர் - சந்திர சூரியர். கிடந்தென - கிடந்தாற் போல. கடம் கலுழ் - மதம் பரவும். களிற்றுரிவை - யானைத் தோல். மடங்கல் ஈர் ஒரி - சிங்கத்தின் பச்சைத்தோல். அலமர - அசைய. “சிங்கத்துரி மூடுதிர்” (தே.) என்பதனால் சிங்கத்தோலையும் இறைவன் போர்த்ததறிக. யானைத