பக்கம் எண் :

திருவாடுரூர் நான்மணி மாலை237

மடங்கலீ ருரியு முடன்கிடந் தலமர
15
விண்பட நிவந்த திண்பு யாசல
நெட்டிலைக் கமுகி னெடுங்கயி றார்த்துக்
கட்டுபொன் னூசல் கன்னிய ராடவப்
பைங்குலைக் கமுகு பழுக்காய் சிந்த
வெண்கதிர் நித்திலம் வெடித்துகு தோற்றம்
20
கந்தரத் தழகு கவர்ந்தன விவையென
அந்தி லாங்கவ ரார்த்தன ரலைப்ப
ஒண்மிட றுடைந்தாங் குதிரஞ் சிந்தக்
கண்முத் துகுத்துக் கலுழ்வது கடுக்கும்
தண்டலை யுடுத்த வொண்டமிழ்க் கமலைப்
25
பொற்பதி புரக்கு மற்புதக் கூத்தநின்
சேவடிக் கொன்றிது செப்புவன் கேண்மதி
விலங்கினுண் மிக்கது விண்ணவர் தருவென
ஒருங்குவைத் தெண்ணுவ தோர்வழக் கன்மையின்
ஒத்த சாதியி னுயர்புமற் றிழிபும்
30
வைத்தன ரல்லதை வகுத்தனர் யாரே
ஆருயிர்க் கமைத்த வோரெழு பிறப்பினுள்

தோலுக்கு இருளும் சிங்கத்தோலுக்குப் பகலும் உவமைகள்; “ இரும்பிடி மே எந்தோலன்ன விருள்சேர்பு” (மதுரைக். 634.)

    (16-24) சோலை வருணனை. மகளிர் பாக்குமரத்தில் கட்டிய ஊசலில் ஆடும்போது நிகழ்வன கூறப்படும்.

    கமுகமரத்தில் நீண்ட கயிற்றைப் பிணித்து. பழுக்காய் - பாக்குக் காயை. கமுகமரத்தில் முத்து உண்டாகு மாதலின் ஊசலை அசைத்தலினால் அதிலிருந்து நித்திலம் உக்கதென்றார், சுந்தரத் தழகு - கழுத்தின் அழகை; மகளிர் கழுத்துக்குக் கமுகை உவமை கூறுதல் மரப்ழ. அந்திலை, ஆங்கு: அசைநிலைகள். அலைப்ப - வருத்த. பாக்குக்காய்க்கு இரத்தமும் முத்துக்குக் கண்ணீரும் ஒப்பு.

    (25) பொற்பதி - பொலிவு பெற்ற நகரம்.

    (27-30) ஒரே சாதிப் பொருள்களுள் உயர்உ தாழ்வு கூறுதல் மரபேயன்றி வெவ்வேறு சாதிப்பொருள்களை ஒருங்கு வைத்தெண்ணி உயர்வு தாழ்வு கூறுதல் மரபன்று.

    விண்ணவர் தரு - கற்பகம். அது விலங்கினத்தைச் சார்ந்தது அன்மையின், ‘விலங்கினுண் மிக்கது விண்ணவர் தரு’ என்றல் பிழையாயிற்று. அல்லதை - அல்லது பிறவாறாக; ஐ : சாரியை.

    (31-35) தேவசாதி எழுவகைப் பிறப்பினுள் முதன்மையானது.