| முற்படு தேவருண் முதல்வனென் றெடுத்துக் | | கற்பனை கடந்த கடவுணிற் பழீச்சும் | | தொன்மறைக் குலங்கள் முன்னிய தியாதெனப் | 35 | பன்மறை தெரிப்பினும் பயன்கொள வரிதால் | | தேவரி னொருவனென் றியாவரு மருளுற | | நீயே நின்னிலை நிகழாது மறைத்துக் | | கூறிய தாகு மாகலிற் | | றேறினர் மறையெனச் செப்பினர் நன்கே. |
நேரிசை வெண்பா 329. | நல்லார் தொழுங்கமலை நாதனே நாதனெனக் | | கல்லாதார் சொல்லுங் கடாவிற்கு - வெல்லும் | | விடையே விடையாக மெய்யுணரா ரையுற் | | |
கட்டளைக் கலித்துறை 330. | இதுவே பொருளென் றெவரெவர் கூறினு மேற்பதெது | | அதுவே பொருளென் ற்றிந்துகொண்டேனப் பொருளெவர்க்கும் |
கற்பனை கடந்த கடவுள்: 332, 539. பழிச்சும் மறைக்குலங்கள் - புகழும் வேத்த் தொகுதிகள். (பி-ம்.) ‘பழிச்சுதும்’. இறைவனைத் தேவர்களுள் மேலானவனென்று வேதம் கூறுதலின் பொருள் அறிவரிது. எழுவகைப்பிறப்பினுள்ஒன்றாகிய தெய்வப் பிறப்பைக் கடந்த நின்னை அத்தெய்வப் பிறப்பில் வைத்தெண்ணுதல் தக்கதன்று. (36-39) நிகழாது - வெளிப்பட உணர்த்தாமல். தேறினர் - அறிவிற்றெளிந்தோர். மறை - உண்மையை மறைத்துக் கூறுவது.
இறைவனைத் தேவருள் ஒருவனாக்க் கருதல் ஏற்புடையதன் றென்பதும் அவன் அவருக்கும் அரிய நிலையின்னென்பதும் கருத்து.
329. கமலைநாதனே நாதன் - திருவாரூர்த் தியாகப் பெருமானா முதல்வன்? நாதனே; ஏ, வினா. கடா - வினா. திருமால் முதலியோருக்கு முதன்மை கற்பித்துச் சிவபிரானது முதன்மையில் ஐயுற்று வினாவுவாரைக் கல்லாதா ரென்றார். வெல்லும் - வெற்றிபெறும். விடையே விடை ஆக - சிவபெருமானைத் தாங்கும் திருமாலாகிய இடபமே விடையாக நிற்பவும். சிவபெருமானுக்கு வாகனமாகித் தாங்கும் செயலால், திருமால் அப்பெருமானுக்கு அடங்கியவரென்பதும் அதனாற் சிவபெருமானே முதலைவனென்பதும் போதருதலை நினைந்து, ‘விடையே விடையாக’ வென்றார். விடை - இடபம், உத்தரம்.
330. இதுவே பொருள் - இம்மூர்த்தியே பரம்பொருள். எவரெவர் - பல்வேறு சமயத்தார். ஏற்பது - அவற்றை ஏற்றுக் கொள்ளும் பொருள்;
|