பக்கம் எண் :

24குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு


(சந்த விருத்தம்)
4.
சிகர வடவரை குனிய நிமிர்தரு
   செருவி லொருபொரு வில்லெனக் கோட்டினர்
செடிகொள பறிதலை யமண ரெதிரெதிர்
   செலவொர் மதலைசொல் வையையிற் கூட்டனர்
திருவு மிமையவர் தருவு மரவொலி
   செயவ லவர்கொள நல்குகைத் தீட்டனர்
சிறிய வெனதுபுன் மொழியும் வடிதமிழ்
   தெரியு மவர்முது சொல்லெனச் சூட்டினர்

பகரு மிசைதிசை பரவ விருவர்கள்
   பயிலு மியறெரி வெள்வளைத் தோட்டினர்
பசியவறுகொடு வெளிய நிலவிரி
   பவள வனமடர் பல்சடைக் காட்டினர்
பதும முதல்வனு மெழுத வரியதொர்
   பனுவ லெழுதிய வைதிகப் பாட்டினர்
பரசு மிரசத சபையி னடமிடு
   பரத பதயுக முள்ளம்வைத் தேத்துதும்

    4. (சந்தக்குழிப்பு.) தனன தனதன தனன தனன தனன தனதன தய்யனத் தாத்தன.

    (அடி, 1) வடவரை - மேருமலை. குனிய - வளைய. செருவில் - திரிபுராதிகளோடு செய்ய எண்ணிய போரில். கோட்டினர் - வளைத்தவர். வடவரை குனியக் கோட்டினர். செடிகொள் - நாற்றத்தைக் கொண்ட. பறிதலை அமணர் - தாமே தம் மயிரைப் பறிக்கும் தலையையுடைய சைனர்; மயிர் பறித்தல் அவர்கட்கு ஓரு விரதம். அமணரெதிர் - அமணருக்கு முன்னே. எதிர்செல - நீருக்கு எதிரே செல்ல. மதலை - திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார். சொல்: ‘வாழ்க வந்தணர்’ என்னும் பாசுரம், கூட்டினர் - கூடச்செய்தவர்.

    திரு - திருமகள். தரு - கற்பகம். அர ஒலி - ஹரவென்னும் ஒலியை. ஹரவென்னும் திருநாமத்தைச் சொல்வோர் திருமால் பதவியையும் இந்திர பதவியையும் கொள்வரென்பது கருத்து. கைத்தீட்டு - கையெழுத்து; இங்கே உத்தரவுக்காயிற்று. முதுசொல் - தேவார முதலியன.

    (2) இருவர்கள் - கம்பளாசுவதரர்கள். இயல் - இயல்பு. வெள்வளைத் தோடு - வெள்ளிய சங்கத்தோடு அறுகு - அறுகம்புல். நில - நிலா. பவளவனம் அடர் - பவளக்காட்டைப் போல் அடர்ந்த. பனுவல்: ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் செய்யுள். இறைவன் திருவாக்கில் வருவன