பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்25

தகர மொழுகிய குழலு நிலவுமிழ்
   தரள நகையுமெ மையனைப் பார்த்தெதிர்
சருவி யமர் பொரு விழியு மறுகிடை
   தளர வளர்வதொர் செவ்விமுற் றாக்கன
   தனமு மனனுற வெழுதி யெழுதரு
   தமது வடிவையு மெள்ளிமட் டூற்றிய
தவள மலர்வரு மிளமி னொடுசத
   தளமின் வழிபடு தையலைத் தூத்திரை

மகர மெறிகட லமுதை யமுதுகு
   மழலை பழகிய கிள்ளையைப் பேட்டனம்
மடவ நடைபயில் பிடியை விரைசெறி
   வரைசெய் புயமிசை வையம்வைத் தாற்றிய
வழுதி யுடையகண் மணியொ டுலவுபெண்
   மணியை யணிதிகழ் செல்வியைத் தேக்கமழ்
மதுர மொழுகிய தமிழி னியல்பயில்
   மதுரை மரகத வல்லியைக் காக்கவே.
(2)

வெல்லாம் வேதம் ஆதலின் வைதிகப்பாட்டினரென்றார். இரசதசபை - வெள்ளி அம்பலம்; மதுரைத் தலத்துள்ளது. பதயுகம் - இரண்டு திருவடிகள்.

    (3) தகரம் - மயிர்ச்சாந்து. எம் ஐயனை - சிவபெருமானை. சருவி - பின்னிட்டு, மறுகு - வருந்துகின்ற. எழுதரு - பிறரால் எழுதுதற்கரிய. மட்டு - தேன். தவளமலர் வரும் இளமின் - கலைமகள். சத தள மின் - திருமகள்; சத தளம் - நூறு இதழை யுடைய தாமரைப் பூ.

    (4) மகரத்தை எறிகின்ற; மகரம் - மகரமீன். மழலை - எழுத்து வடிவம் பெற்றுத் தோற்றும் இளஞ்சொல்; “மெய்பெறா வெழுத்துயிர்க்கு மழலை” (சீவக. 181, ந.) பேட்டனம் - பெண் அன்னம். மடவ நடை - இள நடை. வரைசெய் - மலையை யொத்த; செய் உவம வுருபு. வழுதி - மலையத்துவச பாண்டியன். வரைசெய்புச முதலியன வழுதிக்கு அடை. தேக்கமழ் மதுரம் - தேனிற் பரவிய இனிமை. தமிழின் இயல் பயில் மதுரை; “தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரை” (சிறுபாண். 66-7); “கூடலி னாய்ந்தவொண்டந்தமிழ்” (திருச்சிற்.)

    (முடிபு) குழலும் நகையும் விழியும் தனமும் எழுதி எள்ளி இளமீனொடு சத தள மின் வழிபடு தையலை, அமுதை, கிள்ளையை, பிடியை, பெண்மணியை, செல்வியை, மதுரை மரகதவல்லியைக் காக்க, வைதிகப் பாட்டினருடைய பதயுகம் ஏத்துதும்.