பக்கம் எண் :

26குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு


(வேறு)
5.
கைத்தல மோடிரு கரடக் கரைத்திரை
   கக்குக டாமுடை கடலிற் குளித்தெமர்
சித்தம தாமொரு தறியிற் றுவக்குறு
   சித்திவி நாயக னிசையைப் பழிச்சுதும்
புத்தமு தோவரு டழையத் தழைத்ததொர்
   பொற்கொடி யோவென மதுரித் துவட்டெழு
முத்தமிழ் தேர்தரு மதுரைத் தலத்துறை
   முத்தன மேவுபெ ணரசைப் புரக்கவே.
(3)


(வேறு)
6.
பமர மடுப்பக் கடாமெடுத் தூற்றமொர்
பகடு நடத்திப் புலோமசைச் சூரப்புயல்
பருகி யிடக்கற் பகாடவிப் பாற்பொலி
பரவை யிடைப்பற் பமாதெனத் தோற்றிய

    5. (சந்தக்குழிப்பு.) தத்தன தானன தனனத் தனத்தன.

    (அடி, 1) கைத்தலமும் இரண்டு கரடங்களுமாகிய கரையின் கண்; கரடம் - மதம்பாயும் சுவடு; இவை செவியடிகள். திரையைக் கக்கும். கடாம் - மதம். கடமாகிய உடைகடல். எமரென்றது அடியார்களை.

    (2) தறி - யானை கட்டும் தம்பம்; “பத்தர் சித்தத் தறியணையும் ......ஒண்களிறே” (மூத்த. திருவிரட்டை, 18.) துவக்குறு-கட்டப்படுகின்ற. சித்தி விநாயகன் மதுரைத் தலவிநாயகர்.

    (3) மதுரித்து - இனித்து. உவட்டெழு - பெருக்கெழுகின்ற.

    (4) முத்தனம் - மூன்று நகில்கள். தேவி தடாதகைப்பிராட்டிாராக அவதரித்தகாலத்து மூன்று நகில்கள் இருந்தமையின் இங்ஙனம் கூறினர்.

    (3-4) அமுதோ கொடியோவென உறை பெண்ணரசு.

    (முடிபு.) பெண்ணரசைப் புரக்க, சித்தி விநாயகனது இசையைப் பழிச்சுதும்.

    (6) (சந்தக்குழிப்பு.) தனன தனத்தத் தனாதனத் தாத்தன.

    (அடி, 1) பமரம் = ப்ரமரம் - வண்டு (31, 196.) வண்டு யானையின் மதத்தை உண்ணும். பகடு - ஐராவதமென்னும் யானை. புலோமசையென்னும் தெய்வமகளாகிய மேகம்; சூர் - தெய்வப்பெண் (பி-ம்.) ‘புலோமிசை’. புயல்: எழுவாய். பருகியிட - இன்பம் நுகர. பரவை - கடல்; என்றது இந்திரனை; இந்திரன் கரிய நிறத்தினன். பற்பமாது - திருமகள். (பி-ம்.) ‘பத்மமாது’. இந்திரனிடத்தே தெய்வயானை தோற்றினளென்பது உபசாரம். நடத்திப் பருகியிடப் பொலி பரவையென்க.