பக்கம் எண் :

240குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

பலிதேர்ந் துண்ணினு முண்ணு மொலிகழற்
பைந்துழாய் முகிலும் பழமறை விரிஞ்சனும்
5
இந்திரா தியரு மிறைஞ்சினர் நிற்ப
மற்றவர் பதங்கள் மாற்றியும் வழங்கியும்
பற்றலர்ச் செகுத்து முற்றவர்த் தாங்கியும்
பரசுநர் பரசப் பணிகுநர் பணிய
அரசுவீற் றிருப்பினு மிருக்கு முரைசெயும்
10
யோக சாதனம் போகிகட் கின்மையிற்
செஞ்சடை விரித்து வெண்பொடி பூசி
எருக்கங் கண்ணியுஞ் சூடி விருப்புடை
இடப்பான் மடந்தை நொடிப்போழ்து தணப்பினும்
மடலூர் குறிப்புத் தோன்ற விடலரும்
15
காம்மீ தீர வேமுற் றிரந்தவள்
தாமரைச் சீறடி தைவந் தம்ம
புலவியிற் புலந்துங் கலவியிற் களித்தும்
போகமார்ந் திருப்பினு மிருக்கும் யோகிகட்
கெய்தா வொண்பொருள் கைவந்து கிடைப்ப
20
ஞான முத்திரை சாத்தி மோனமோ
டியோகுசெய் திருப்பினு மிருக்கு மீகெழு

    (1-9) தலையோடு - பிரமகபலம். கடை - வாயில்.

    (4-9) பைந்துழாய் முகில் - திருமால். விரிஞ்சன் - பிரமதேவர். பதங்கள் - பதவிகள். பற்றலர்ச் செகுத்தும் - பகைவரை அழித்தும். உற்றவர்த் தாங்கியும் - தன்பால் வந்தடைந்தோரைப் பாதுகாத்தும். தியாகேசப் பெருமான் திருவாரூரில் அரசராக வீற்றிருந்து ஆட்சி புரிந்தன்னாதலின் அரசுவீற்றிருக்குமென்றார்.

    (10-14) யோகசாதனம் - யோகம் செய்வாருக்குரிய வேடம் முதலியன. போகிகள் - மகளிர் போகத்தை யுடையோர். இறைவன் சடைவிரித்துத் திருநீறுபூசி எருக்கங்கண்ணியைச் சூடியிருத்தலிக்கு ஒரு காரணம் கறிபிக்கின்றார். அவை யோக சாதனமெனின், போகியாகிய இரைவனுக்கு யோகசாதனம் வேண்டுவனவன்றாதலின், அவை மடலூருங் குறிப்பைக்காட்டுவனவென்றார். மடலூர்வோர் சடைவிரித்தல் முதலியவற்றைச் செய்தல் மரபு. இடப்பால் மடந்தை - உமாதேவியார். தணப்பினும் - பிரிந்தாலும்.

    (15-18) ஏம் உற்று - மயக்கத்தை அடைந்து. தைவந்து - வருடி. புலவி - ஊடல். அம்ம : வியப்புக்குறிப்பு. போகமார்ந்து - இன்பத்தை நுகர்ந்து.

    (19-20) ஞானமுத்திரை - சின்முத்திரை. யோகு - யோகம். ஆசாரிய மூர்த்தியாகியதைக் குறித்தபடி.