பக்கம் எண் :

திருவாடுரூர் நான்மணி மாலை241

தமனிய மாடத் தரமிய முற்றத்
தைங்கணைக் கிழவ னரசிய னடாத்தக்
கொங்கைமால் களிறுங் கொலைக்கண்வாட் படையும்
25
சில்கா ழல்குல் வெல்கொடித் தேரும்
பல்வகை யுறுப்பும் படையுறுப் பாகப்
பவக்குறும் பெறியுந் தவக்குறும் பெறிந்து
நுணங்கிய நுசுப்பி னணங்கனார் குழுமிக்
கைவகுத் திருந்து கழங்கெறிந் தாட
30
மையுண் கண்கண் மறிந்தெழுந் தலமரல்
செம்முகத் தாமரைச் சிறையளிக் குலங்கள்
அம்மென் காந்தளி னளிக்குல மார்த்தெழக்
கலந்துடன் றழீஇக் காமுற னிகர்க்கும்
பொலன்செய் வீதிப் பொன்மதிற் கமலை
35
அண்ணன் மாநகர்க் கண்ணுதற் கடவுள்
கற்பனை கழன்று நிற்றலின்
நிற்பதிந் நிலையெனு நியம்மோ வின்றே.    
(25)

நேரிசை வெண்பா
333.
இன்னீ ருலகத்துக் கின்னுயிர்யா மென்றுணர்த்தும்
நன்னீர் வயற்கமலை நாதனார் - பொன்னார்ந்த
சேவடிக்கா ளானார் சிலரன்றே தென்புலத்தார்
கோவடிக்கா ளாகார் குலைந்து.    
(26)

    (22-3) தமனிய மாடம் - பொன் மாளிகை. அரமிய முற்றம் நிலா முற்றம். ஐங்கணைக்கிழவன் - காமன். நடாத்த - நடத்தும்படி.

    (24-8) கொங்கை முதலியவற்றைக் களிறு முதலிய படைகளாக உருவகம் செய்கின்றார். சில்காழ் - சில வடங்கள். உறுப்பு - அங்கம். படையுறுப்பு - சேனையின் உறுப்புக்கள். பவக்குறும்பு - பிறவியாகிய பகை. தவக்குறும்பு - தவஞ்செய்வோராகிய பகைஞர்.

    (29-33) கைவகுத்து - பக்கம் பக்கமாகப் பிரித்துக்கொண்டு; படை வகுத்தென்பது வேறு பொருள். கழங்கு - ஒருவகை விளையாட்டுக் கருவி; கழற்சிக்காய். அலமரல் - சுழலுதல். அளிக்குலம் - வண்டினம். முகத்திலுள்ள கண்கள் கையிலிருந்தெழும் நீலமணிகளாகிய கழங்குகளைப் பார்த்து அவற்றோடே உலவுதல், இரு தாமரையிலுள்ள வண்டுகள் காந்தட் பூவிலிருந்து எழும் வண்டுகளோடு கலந்து பயிலுதலைப் போன்றது. முகத்துக்குத் தாமரையும், கைக்குக் காந்தளும், கண்ணுக்கும் கழங்குக்கும் வண்டுகளும் உவமைகள்.

    (34-7) கற்பனை சுழன்று நிற்றல் : 328, 539. நியம்ம் - வரையறை.

    333. இனிய நீர் சூழ்ந்த உலகம்; பயனால் இன்னீராயிற்று. சேவடிக்கு ஆளானார் - திருவடிக்கு ஆட்பட்டோர். தென்புலத்தார் கோ அடிக்கு - யம