பக்கம் எண் :

242குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கட்டளைக் கலித்துறை
 
334.
 குலைவைத்த செவ்விள நீர்குளிர் பூம்பொழிற் கொம்புக்கின்ப
 முலைவைத்த தொக்குங் கமலேசர் வேணி முகிழ்நகைவெண்
 டலைவைத்த வேனற் புனமொக்குங் கங்கையத் தண்புனத்தில்
 நிலைவைத்த மாதரை யொக்குங் கவணொக்கு நீள்பிறையே.    
(27)

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
 
335.
பிறையொழுக வொழுகுபுனற் கங்கை யாற்றின் 
    பேரணையிற் றொடுத்துவிட்ட பெரும்பாம் பென்னக் 
கறையொழுகும் படவரவம் படரும் வேணிக் 
    கண்ணுதலார் கமலையிற்பைங் கமலை போல்வீர் 
நறையொழுகு மலர்ப்பொழில்குத் தகையாத் தந்தீர் 
    நானிரண்டு மாவடுவு நாடிக் காணேன் 
நிறையொழுகு மிளநீரு நிற்க்க் காணேன் 
    நீர்செய்த காரியமென் னிகழ்த்துவேனே.    
(28)

தண்டனைக்கு (658, 687), தியாகேசருடைய அடியார்க்கு யம தண்ட மில்லையென்றபடி.

    334. பொழிலாகிய மங்கைக்கு இளநீர், நகில்வைத்தாற் போன்றது (428). கொம்பு - பெண். வேணி - சடை. சடையானது ஏன்ற்புனத்தையும், கங்கை அப்புனத்தைக் காக்கும் குறமகளையும், பிறை கவணையும் ஒக்கும். ஏனற்புனம் - தினைக்கொல்லை. வெண்டலை - சிவபிரான் சடையிற் சூடிய சிரமாலை; ஏன்ற்புனத்தில் சுண்ணம் பூசித் தலைபோற் செய்து வைத்ததோர் உருவம்.

    335. இது புறங்காட்டலென்னும் துறை. தலைவன் கூற்று.

    கறை - விடம். சடையிலுள்ள பாம்பு கங்கையாற்றுக்கு அணை போடும் பொருட்டு அமைத்த பாம்பைப்போன்றது. வைக்கோற் புரியை அணையிலிடுவர். அதனைப் பாம்பென்பர்; “கிட்டு வார்பரி நிறுத்து வார்ர வுருட்டுவார்” (திருவிளை. 61 : 5.) கமலை - திருவாரூர், திருமகள். மலர்ப்பொழிலென்றது கூந்தலை. குத்தகை வழக்கு. இரண்டு மாவடுவென்றது கண்களை. இளநீர் : நகில். புறங்காட்டியமையின் கண்ணையும் தனத்தையும் காணாமல் கூந்தலை மட்டும் கண்டான். சோலையைக் குத்தகைக்குவிட்டு அதிலுள்ள மாவடுவையும் இளநீரையும் யான் பெறாமற் செய்தல் தக்க தன்றென்று ஒரு பொருள் தோற்றியது.