| றன்னுடை மயக்கந் திசைமேல் வைத்துச் | சென்னெறி பிழைத்தோன் திசைமயங்கிற்றென | மொழிகுவ தேய்ப்ப முதுக்குறை வின்மையிற் | பழமறை மயங்கிற் றென்னா முழுவதும்35 | எய்யா திசைக்குதும் போலும் | ஐயநின் றன்மை யளப்பரி தெமக்கே. | | | | | |
நேரிசை வெண்பா 337. | அள்ளற் கருஞ்சேற் றகன்பணைசூ ழாரூரர் | | வெள்ளப் புனற்சடைமேல் வெண்டிங்கள் - புள்ளுருவாய் | | நண்ணிலா தாரை நகைக்கு நகையைநன்றோ | | |
(31-36) வேதம் மய்ங்கக் கூறுவதென்று கூறுவார் கூற்றைக் காரணங் கூறி வலியுறுத்துகின்றார்.
முதுக்குறைவு - முதிர்ந்த அறிவு. பழமறை மயங்கிற்று என்று - பழைய வேதம் மயங்கியதென்று. முழுவதும் எய்யாது - முற்றும் உணராமல். என்னா இசைக்குதும்; என்னா - என்று எங்களுணைய மயக்கத்தை வேத்ததின்மேல் ஏற்றிக் கூறுகின்றோம்; முற்றும் உணர்ந்தால் இங்ஙனம் கூறமாட்டோம். இச்செய்யுளின் பிற்பகுதியின் கருத்து விளங்குதற் பொருட்டுப் பின்வருமாறு வினாவிடைகளாக்குதல் பொருந்தும்.
வினா:- இறைவன் வாய்மொழியே வேதமென்பர்; அதன் கண் அவனது தன்மை கூறப்படும்; தன்னைத்தான் புகழ்தல் அறிவுடையோர் செயலாகுமோ?
விடை:- அவனது பெருமை பிறரால் அறிவரிதாதலின் அதனை அவனே கூறல்வேண்டும்; தன்னுடை யாற்றலுணராரிடையே தற்புகழ்தலும் தகுமாதலின் இரு பொருந்தும். வினா:- வேதம் இறைவன் உரைத்தது எனின், அதன்கண் பரம்பொருளின் நிலையா மயங்க் உரைத்தது என்? விடை:- அது மயங்கக் கூறவில்லை; ஐயமில்லாமலே உணர்த்தியது. வினா:- வேதம் மயங்கிற்றென்று பிறரும் கூறுகின்றனரே? விடை:- திசை மயக்கத்தை யடைந்த ஒருவன் தனது மயக்கத்தைத் திசையின்மேல் வைத்துத் திசைமயங்கிற்றென்று கூறுதலைப்போலத் தம் மயக்கத்தை வேதத்தின்மேல் ஏற்றிக்கூறியதே ஆகும் அது. வினா:- பின், அவர் மயங்கற்குக் காரணம் என்ன? விடை:- அவர்கள் முற்றும் உணர்ந்து உண்மையை அறியவில்லை.
337. அள்ளற் கருஞ்சேறு - குழைவையுடைய கரிய சேறு. அகன்பணை - அகன்ற வயல்கள். புள் - அன்னம். புள்ளுருவாய் (திருமுடியை)
|