| கொல்லயில்வேற் பசுங்குழவி திருவுருவு | மருவுருவாம்கணங்கண் மூன்றின் | | நல்லுருவா தலினன்றோ விவரகில காரணராய் | | | |
நேரிசை யாசிரியப்பா 340. | நவமணி குயின்ற நாஞ்சில்சூழ் கிடக்கும் | | உவளகங் கண்ணுற் றுவாக்கட லிஃதெனப் | | பருகுவா னமைந்த கருவிமா மழையும் | | செங்கண்மால் களிறுஞ் சென்றன படிய | 5 | வெங்கணவா ளுழவர் வேற்றுமை தெரியார் | | வல்விலங் கிடுதலின் வலிவிலங் கிதுவெனச் | | செல்விலங் கிடவெதிர் சென்றனர் பற்றக் | | காக பந்தரிற் கைந்நிமிர்த் தெழுந்து | | பாகொடு முலாவிப் படர்தரு தோற்றம் | 10 | நெடுவேல் வழுதி நிகளம் பூட்டிக் | | கொடுபோ தந்த கொண்டலை நிகர்க்கும் | | சீர்கெழு கமலைத் திருநகர் புரக்கும் |
மூன்று’. சிவபெருமானது வெண்ணிறம் சத்துவ குணத்திற்கும், உமா தேவியாரது நீலநிறம் தாமத குணத்திற்கும், முருகக் கடவுளது செந்நிறம் ரஜோ குணத்திற்கும் உரியனவாதலின் இங்ஙனம் கூறினர். நவில்கின்றார் - பயிலுகின்றார். முக்குணமுடைய மூர்த்திகளால் உலகத்தின் படைப்பு முதலியன நடைபெறுதலின் அம்முக்குணத்திற்கும் உருவம்போன்ற இவர்கள் அவற்றை நடத்துவார் போன்றனர். தியாகேசர் சோமாஸ்கந்த மூர்த்தியாதலின் அம்பிகையையும் முருகக் கடவுளையும் உடன் கூறினார்.
340. (1-11) அகழியின்கண் மேகத்திற்கும் யானைக்கும் வேறுபாடு தெரியாமல், யானைப்பாகர் செய்யும் செயல் கூறப்படும்.
நாஞ்சில் - மதில். உவளகம் - அகழ். உவாக்கடல் - நீர் நிறைந்த கடல். கருவி மா மழை - மின் முதலிய தொகுதிகளையுடைய கரிய மேகம். வாள் உழவர் - வீர்ர். யானைக்கும் மேகத்திற்கும் வேற்றுமை தெரியாமல் இரண்டுக்கும் விலங்கிட்டனர் (206). வல்விலங்கு இது என செல் விலங்கிட - வலிய மிருகமாகிய யானை இது என்று அறிந்து மேகமானது நீங்க். காகபந்தர் - காகங்கள் ஒருங்கே படர்ந்து பறந்துவரும் பரப்பு. படர்தரு தோற்றம் - வானத்தில் மேகம் செல்லும் காட்சி. வழுதி - உக்கிரகுமார பாண்டியன். நிகளம் - விலங்கு. கொடுபோதந்த - கொண்டு வந்த.
(12) புரக்குமென்றார் தியாகேசர் அரசராயிருந்தமைபற்றி.
|