பக்கம் எண் :

248குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கார்திரண் டன்ன கறைமிடற் றண்ணல்
மூவரென் றெண்ணநின் முதற்றொழில் பூண்டும்
15
ஏவலிற் செய்துமென் றெண்ணா ராகி
அடங்கா வகந்தைக் கறிவெலாம் வழங்கி
உடம்பு வேறா யுயிர்ப்பொறை சுமந்து
நாளு நாளு நேடினர் திரிந்தும்
காணா தொழிந்ததை நிற்க நாணா
20
தியாவரு மிறைஞ்ச விறுமாப் பெய்துபு
தேவரென் றிருக்குஞ் சிலர்பிறர் தவத்தினும்
மிகப்பெருந் தொண்டரொ டிகலிமற் றுன்னொடும்
பகைத்திறம் பூண்ட பதகனே யெனினும்
நின்றிருப் பாத நேர்வரக் கண்டு
25
பொன்றின னே்னும் புகழ்பெற் றிருத்தலின்
இமையா முக்கணெந் தாய்க்கு
நமனார் செய்த நற்றவம் பெரிதே.
(33)

    (14-19) மூவரென்றெண்ண - நின்னொடு சேர்த்து மும்மூர்த்திகளென்று எண்ணும்படி. நின் முதற்றோழிலென்றது, இறைவன்றொழிலாகிய சங்காரத்திற்கு முற்பட்ட சிருட்டியையும் திதியையும். அகந்தைக்கு அறிவெலாம் வழங்கி - அறிவின்றி அகங்காரத்தை யடைந்து. உடம்பு வேறாய் - அதனால் வேறு வேறு உடம்பை எடுத்து; அன்னமும் பன்றியுமாகிய உடம்புகளை யெடுத்து: “யாதவ குலத்துநெடு மாதவன் மருப்புடைய வேன மிரு கத்துருவமா, வேதமொழி பெற்றவய னோதிமமெ னப்பறவை வேடமுமெடுத் ததிலையோ, ஓதருணை வித்தகரை மூவரி லொருத்தரென வோதியிடு மற்பமதியீர், சீதமதி வைத்தமுடி பாதமல ரைச்சிறிது தேடுத மினைத்தபரமே” (அருணைக்கலம். 6.) உயிர்ப்பொறை சுமந்து - உடம்புகளைச் சுமந்து; பல பிறவியெடுத்து. நேடினர் - இறைவனைத் தேடினவர்களாய்.

    (20-21) யாவரும் தம்மை வணங்குதலினால் தாம் நின்னையொப்பவர்களென்று இறுமாப்பையடைந்து தேவராக இருக்கும் சிலர். சிலர் - பிரம விஷ்ணுக்களாகிய இருவர் (105) “மூவரென்றேயெம் பிரானொடு மெண்ணிவிண் ணாண்டுமண்மேற், றேவரென் றேயிறு மாந்தென்ன பாவந் திரிதர்வரே” (திருவா. திருச்சதகம்.)

    (22-27) யமன் தண்டனையாகவேனும் நின் திருவடியின் தொடர்புடையானாதலின் அவன் செய்த தவம் பெரிதென்பார். தொண்டர் - மார்க்கண்டேயர். நமனைப் பதகனென்றும் பொன்றினவனென்றும் கூறுங்கால் ஒருமையிற் கூறினவர், அவனது நறவத்தை வியக்குமிடத்து அவ்வியப் புணர்ச்சியால் நமனாரென்று பன்மையாற் கூறினார். “மேலு மறிந்தில னான்