பக்கம் எண் :

250குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

எழுசீர்ச் சந்தவிருத்தம்
343.
கொண்டலை யலைத்தபல தண்டலை யுடுத்தழகு
    கொண்டக மலைப்ப தியுளார்க்
கண்டபி னெனக்கிதழி தந்தன ரெனப்பசலை
    கண்டுயிர் தளிர்த்த மடவாள்
அண்டரமு தொத்ததவமு தந்தனை யிருட்கடுவி
    தன்பரருண் மிச்சில் கொலெனா
உண்டிடு முளத்தலவ ருண்குவரென் மிச்சிலென
    உண்டதை மறுத்து மிழுமே.    
(36)

நேரிசை யாசிரியப்பா
344.
உமிழ்தேன் பிலிற்று மொள்ளிணர்க் கூந்தல்
அமிழ்துகு மழலை யம்மென் றீஞ்சொற்
சில்லரித் தடங்கண் மெல்லிய லொருந்தி

கூந்தல்; சுரும்பு - வண்டு. வரைத்தோகை - மலைமகள். பங்கு ஆன - ஒரு பாதியாக இருக்கும். மயிலின் முன் பாம்பு அடங்குமென்பதை நினைந்து இங்ஙனம் கூறினார்; “ஒப்பிலா மயூர நேர்வார் ............ கருதிமுன் பார்த்தும்” (திருவால. 62 : 11.)

    343.(சந்தக் குழிப்பு.) தந்தன தனத்தனன தந்தன தனத்தனன தந்தன தனத்த தன்னா.

    தோழி கூற்று; செவிலி கூற்றுமாம்.

    தலைவி காம மயக்கத்தாற் செய்யும் செயல்கள் கூறப்படும்.

    தியாகப்பெருமானைக் கண்ட பிறகு அவரது பிரிவால் உண்டான பசலையைத் தனது மயக்கத்தால் அவரளித்த கொன்றைமலராக எண்ணி மகிழ்வாள். கொண்டலை - மேகத்தை. அலைத்த - ஊடுருவிச் சென்று வருத்திய. தண்டலை - சோலைகள். இதழி - கொன்றைப்பூ: இது பொன்னிறமுடையதாதலின் பசலைக்கு உவனமயாயிற்று.

    உணவை விடமெனக் கருதிப்பின் விடம் எம்பிரான் உண்டதாதலின் அதனை உண்ணத்தகுமென்று உண்டவள், ‘என் நெஞ்சத்துள்ளே அவர் இருத்தலின் அவரும் இதனை உண்பர்; யான் உண்டது எச்சிற்படுதலின் அவர் உண்ணுதல் தகாது’ என்று மீட்டும் உமிழ்ந்து விடுவாள். அண்டரமுது ஒத்த அமுதம் - தேவாமுதத்தை யொத்த உணவு. இருட்கடு - இருளைப் போன்ற நிறத்தையுடைய விடம். அன்பர் - தியாகேசர். “நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல், அஞ்சுதும் வேபாக் கறிந்து” (குறள், 1128) என்பது இங்கே ஒப்புநோக்கற்குரியது.

    344. இதில் முதல் 20 அடிகளில் ஒரு தலைவிக்கும் தலைவனுக்கும் மிடையே நிகழும் ஊடல் நிகழ்ச்சியைக் கூறுகின்றார்.