பக்கம் எண் :

252குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

15
கைம்மிகு சீற்றமுங் காதலு மலைப்ப
வெள்ளப் புணர்ச்சியின் வேட்கையுள் ளடக்கி
உள்ளப் புணர்ச்சிய ளூடின ணிற்பது
தாதவிழ் தெரியற் சாக்கியர் பெருமன்
காதலுட் கிடப்பக் கல்லெறிந் தற்றே
20
இத்திற மகளி ரிளைஞரோ டாடும்
நித்தில மாட நீண்மறு குடுத்த
மைம்மா முகிறவழ் மணிமதிற் கமலைப்
பெம்மா னருமைப் பெருமா ளாயினும்
ஊனுண் வாழ்க்கைக் கானவர் குருசில்
25
செஞ்சிலை சுமந்த கருமுகி லேய்ப்ப
உண்டுமிழ் தீநீ ருவந்தன ராடிஉம்
விருப்படிக் கொண்ட மிச்சிலூன் மிசைந்தும்
செருப்படிக் கடிகள் செம்மாத் திருந்தும்
தொல்புகழ் விசயன் வில்லடி பொறுத்தும்
30
அருந்தமிழ் வழுதி பிரம்படிக் குவந்தும்
நள்ளிருள் யாமத்து நாவலர் பெருமான்

    (14-7) புணர்ச்சி - மெய்யுறு புணர்ச்சி. வெள்ளம் போன்ற வேட்கையை, உள்ளப் புணர்ச்சி - மனம் ஒத்து நிற்றல். நீற்றம் அலைத்தலின் மெய்யுறு புணர்ச்சியை ஒழிந்தாள்; காதல் அலைத்தலினால் உள்ளப் புணரைச்சியை உடையளாயினாள்.

    (17-9) சாக்கியர் பெருமான் - சாக்கிய நாயனார். காதல் உட்கிடப்ப - சிவபெருமானிடத்து மெய்யன்பு உள்ளத்துள்ளே இருப்ப. கல் எறிந்தற்று - புறத்தே அன்பிலர் போல அவர் கல்லை எறிந்தாற் போன்றது. நிற்பது கல்லெறிந்தற்றென இயைக்க. உள்ளத்துள்ளே வேட்கையும் புறத்தே சினக்குறிப்பும் உடைமைக்கு இவ்வுவமை கூறினார்.

    (21-3) மைம்மா முகில் - கரிய பெரிய மேகங்கள். (பி-ம்.) ‘தவழு மணிமதில்’. அருமைப் பெருமாள்; தியாகேசர் திருநாம்ம்; “வீறுதியா கப் பெருமாள் வீதிவிடங் கப்பெருமாள், கூறுமரு மைப்பெருமாள்” (திருவாரூர்க் கோவை, காப்பு.)

    (24-8) கண்ணப்பருக்கு எளியரானமை கூறுவார். (பி-ம்.) ‘ஊனூண் வாழ்க்கை’. கானவர் குருசில் - கண்ணப்ப நாயனார். செஞ்சிலையாலும் கரிய நிறத்தாலும் நீரை உண்டு உமிழ்வதாலும் மேகம் அவருக்கு உவமையாயிற்று. சிலை - வில். விருப்பு அடிக்கொண்ட மிச்சில் ஊன் - அன்பை அடிப்படையாக்க் கொண்ட மிச்சிலாகிய ஊன். அடிகள் - ஸ்வாமியான நீர். செம்மாந்து - இறுமாந்து. விசயன் - அருச்சுனன்.