பக்கம் எண் :

திருவாடுரூர் நான்மணி மாலை253

தள்ளாக் காத றணித்தற் கம்ம   
பரவை வாய்தலிற் பதமலர் சேப்ப   
ஒருகா லல்ல விருகா னடந்தும்   
35
எளியரி னெளிய ராயினர்   
அளியர் போலு மன்பர்க் டமக்கே.           
(37)

நேரிசை வெண்பா
345.
தம்மேனி வெண்பொடியாற் றண்ணளியா லாரூரர்     
செம்மேனி கங்கைத் திருநதியே - அம்மேனி     
மானே யமுனையந்த வாணிநதி யுங்குமரன்     
தானே குடைவேந் தனித்து.    
(38)

கட்டளைக் கலித்துறை
346.
தன்னொக்குஞ் செல்வக் கமலைப்
   பிரான்செஞ் சடாடவிமற்
றென்னொக்கு மென்னி னெரியொக்குங்
   கொன்றை யெரியிலிட்ட
பொன்னொக்கும் வண்டு கரியொக்குங்
   கங்கையப் பொன்செய்விக்கும்
மின்னொக்கும் பொன்செய் கிழக்கொல்ல
   னொக்குமவ் வெண்பிறையே.    
(39)

    (29-36) நாவலர் பெருமான் - சுந்தரமூர்த்தி நாயனார். காதல் -பரவையாரிடத்துக் கொண்ட காதல். சேப்ப - சிவப்ப. அளியர் - இரங்கும் இயல்பினர்.

    அருமைப் பெருமாளாயினும் (23) அன்பர்களுக்கு எளியரென்க,

    345. தியாகேசப் பெருமானும் உமாதேவியாரும் முருகவேளும் சேர்ந்துள்ள காட்சி திருவேணி சங்கமத்தைப் போன்றுள்ளதென்பர்.

    வெண்பொடி - திருநீறு. தண் அளியால் - குளிர்ந்த திருவருளால். செம்மேனியாயினும் வெண்பொடியால் வெண்ணிறமுடையதாகத் தோற்றியது. வெண்மையும் தண்மையும் கங்கைக்குரியன (319).) அம்மேனி மானே யமுனை - அழகிய திருமேனியையுடைய மானைப்போன்ற உமாதேவி யமுனையை ஒப்பாள்; நிறத்தால் நீலமாதலின் ஒப்புக் கூறினர். வாணிந்தி குமரன் - செந்ந நிறமுடைய முருகவேளே அந்நிறமுள்ள வாணிந்தியைப் போல்வான்; “செய்யன்” (முருகு. 206.) தான், ஏ : அசைநிலைகள். இங்ஙனம் மூன்று நதியும் சேர்ந்த திரிவேணி சங்கமமாக இருத்தலின் தனித்துக் குடைவேம்; குடைவேம் - ஆடுவேம். மூவரையும் ஒருங்கே தியானிப்பே மென்பது கருத்து. திரிவேணி சங்கமம் : 320.

    346. சடாடவி - சடைத்தொகுதியாகிய காடு. அது நெருப்பை ஒக்கும்; “எரிமரு ளவிர்சடை” (புறநா. 56 : 1.) அச்சடையில் கண்ணியாய அணிந்த