பக்கம் எண் :

திருவாடுரூர் நான்மணி மாலை255

தலைவிரித் தன்ன கிளைதொறும் பணைத்து
மறிந்துகீழ் விழுந்தந் நறுந்துணர்க் கொடிகள்
நாற்றிசைப் புறத்து நான்றன மடிந்து
தாற்றிளங் கதலித் தண்டினிற் படரவப்
10
பைங்குலைக் கமுகிற் படர்சிறை விரித்தொரு
கண்செய்கூந்தற் களிமயி னடிப்ப
நெடுந்தாண் மந்திகள் குடங்கையிற் றூக்கி
முட்புறக் கனிக தாக்கிக் கொட்புறும்
வானர மொன்று வருக்கைத் தீங்கனி
15
தானெடுத் தேந்துபு தலைமேற் கொண்டு
மந்திக டொடர மருண்டுமற் றந்தப்
பைந்துணர்க் கொடியிற் படர்தரு தோற்றம்
வடஞ்சூழ்ந்து கிடந்த நெடும்பெருங் கம்பத்
தணங்கனா ளொருத்தி யாடின ணிற்பப்
20
பெரும்பணை தாங்கி மருங்கினர் கொட்டக்
குடந்தலைக் கொண்டொரு கூன்கழைக் கூத்தன்
வடந்தனி னடைக்கும் வண்ணம தேயக்கும்
பூம்பணை மருத்த் தீம்புனற் கமலைத்
திருநகர் புரக்குங் கருணையங் கடவுள்

    (6-9) (பி.ம்) ‘தலைவிரித் தென்னக்’. தலைவிரித்தாற் போன்ற கிளை. கிளையென்றது கமுகமட்டையை. பணைத்து - பருத்து, மறித்து - மடங்கி; 348. கீழே விழுந்து. (பி-ம்.) ‘கீழ்விழுந்த நறுந்’. நான்றன மடிந்து - தொங்கினவாகி வளைந்து. தாறு இளங்கதலித்தண்டினில் - குலையையுடைய இளவாழை மரத்தில். வாழைமரத்தையே தண்டென்றார்; “தண்டித் தண்டிற்றாய்ச் செல் வாரும்” (பரி. 10 :100.)

    (10-11) சிறை - சிறகு. கண்செய் கூந்தல் - கண்களையுடைய தோகையைப் பெற்ற.

    (12-7) மந்திகள் - பெண்குரங்குகள். குடங்கை - உள்ளங்கை. முட் புறக்கனிகள் - பலாப்பழங்களை. கொட்புறும் - சுழன்று வரும். வருக்கைத் தீங்கனி - பலாப்பழத்தை. அந்தப்பைந்துணர்க் கொடியில் - கமுகமரத்திலிருந்து தாழ்ந்து வாழைமரத்தின்மேற் படர்ந்த முல்லைக்கொடியில்.

    (18-22) வடம் - கயிறு. கம்பம் - தூண். பணை - பறை. கழைக் கூத்தன் - மூங்கிலின்மேல் ஏறி ஆடும் கூத்தாடி.

    கமுகமரத்திற்கு நீண்ட கம்பமும், வாழை மரத்திற்குச் சூழ அடிக்கப்பட்ட முளைகளும், இடையே படர்ந்த முல்லைக் கொடிக்கு, முளைக்கும் தூணுக்கும் கட்டப்பட்ட வடமும், கமுகின்மேல் ஆடும் மயிலுக்குக் கம்பத்