| மின்பூத்த சிற்றிடைப் பேரமர்க் கட்கடவுள் | | வேழங் கடம்படுபடா | | வெம்முலைக் கோடுகொண் டுழுதுழு துழக்கமுகை | | விண்டுதண் டேன்றுளிக்கும் | | கொன்பூத்த தெரியற் கடம்பணி தடம்புயக் | | குருசிலைப் பொருசிலைக்கைக் | | குமரனைக் கந்தபுரி முருகனைப் பரவுமென் | | |
1. காப்புப் பருவம்
350. | பூமேவு கற்பகப் பொங்கரிற் செங்கட் | | புலோமசை வளர்த்தகும்பப் | | புணர்முலைக் களியானை விளையாடு பன்னிரு | | பாருப்பனை விருப்பனைத்தும் |
உமாதேவியாரும் அவ்வடிவங் கொண்டு சேர்ந்து, தேவர் முதலியோரது துன்பத்தைப் போக்குதற்பொருட்டு விநாயகக் கடவுளை ஈன்றனரென்னும் வரலாறு தோன்ற இங்ஙனம் கூறினார். இச்சரிதம்காஞ்சிப் புராணம், வலம்புரி விநாயகப் படலத்தால் அறியப்படும்.
(3) கடவுள் வேழம் - தெய்வயானையம்மை, கடம் - குடம். படா - சாயாத. கோடு - யானைத்தந்தம்.
(4) கொன் - பெருமை. கடப்பமரம் மாலையாகப் பூப்பதாதலின், ‘தெரியற் கடம்பு’ என்றார்; “துறுநீர்க் கடம்பின் றுணையார் கோதை” (சிறுபாண். 69); இது முதலுள்ளு ஏற்ற அடை. கடம்பு - கடப்பமலர்; இது முருகக் கடவுளுக்குரியது; ஆகுபெயர். பொரு சிலைக்கை: முருகக் கடவுளுக்கு வில்லும் உண்டு; “அவுணர் முதறடிந்ததனி வில்லியை” (352); “பொறிவரிச் சாபமும்” (பரி. 5 : 65); “ஒருகை தனது வலக்குறங்கி னணங்கைத் தழுவி யுகளமுலை, மருவ வபய மொன்றாக வளர்தோல் வாள்சூ லங்குலிசம், பொருவேல் வாள்வில் கதைபுள்ளம் புயங்கோல் பத்துங் கரம்பத்தின், இருவு மாறு முகத்தேவ சேனாபதிசீ ரிழைப் போரும்” (தணிகைப். அகத்தியனருள்பெறு. 66.) கந்தபுரி : இத்தலத்தின் பெயர். கொழிதமிழ் : 196, 385-7.
(முடிபு.) தமிழ்க்கவி தழையக் குஞ்சரக்கன்றின் செஞ்சரணை யஞ்சலிப்பாம்.
350. (அடி, 1) பொங்கர் - சோலை. புலோமசை - இந்திராணி. புலோமசை வளர்த்த யானை : தெய்வயானை யம்மை (6.) கும்பம் போன்ற நகில்.
|