பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்259

கோமேவு சாரற் குறச்சிறுமி மேல்வைத்த
   குழகனைக் கழகந்தொறும்
கொத்துமுத் தமிழ்மொய்த்த கந்தபுரி முத்துக்
   குமாரனைத் தனிபுரக்க
தேமேவு கடவுட் பொலங்கிரி திசைக்கரிகள்
   திகிரிகிரி குலகிரியொடும்
திரியத் திரித்துமத் தெறியத் தடங்கடற்
   றெண்டிரை முகட்டிதித்த
பாமேவு மதுரம் பழுத்தமுத மொழுகும்
   பசுங்குதலை மழலையஞ்சொற்
பங்கயச் செல்வியிரு கொங்கைக் குவட்டுவளர்
   பச்சைப் பசுங்கொண்டலே.    
(2)


சந்த விருத்தம்
351.
ஒருபு றத்துமர கதமி மைப்பவொளிர்
   மாமேரு மற்றொரு மேருவைச் சாய்த்தென
உலக ளக்கநிமிர் வடபொ ருப்பையொரு
   தோளால்வ ளைத்தபி னாகியைத் தீக்கனல்

பொருப்பு - மலைபோன்ற தோள். தேவியாரை யானையென்றதற்கேற்பத் தோள்களைப் பொருப்பென்றார்.

    (2) குறச் சிறுமி - வள்ளி நாயகியார். குழகன் - இளமைப் பருவமுடையவன். கழகம் - கல்வி பயிலுமிடம். கொத்து முத்தமிழ் - முத்தமிழ் நூல்களின் தொகுதி; “முத்தமிழ்க் கொத்தியல் வல்ல, மற்றுள சங்கத்தவரும்” (திருவால. 15 : 5.) கொத்து முத்தமிழ் மொய்த்த கந்தபுரி : 390-94, 435-7. முத்துக் குமாரன். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முருகக் கடவுளின் திருநாமம்.

    (3) தே மேவு - தெய்வங்கள் விரும்பிய. கடவுட்பொலங்கிரி - மேருமலை. திசைக்கரி - திக்குயானைகள். (பி-ம்.) ‘திசைக்கிரிகள்’. திகிரிகிரி - சக்கரவாளகிரி. குலகிரி - குலாசலங்கள். மத்து - மேருவாகிய மத்து(6.)

    (4) பங்கயச் செல்வி - திருமகள். குவடு - மலை. வளர் - துயிலும். பச்சைப் பசுங்கொண்டல் - திருமால் (3). கொண்டலென்று திருமாலைக் கூறியதற்கேற்ப நகில்களைக் குவடென்றார்.

    (முடிபு.) பசுங்கொண்டல் முத்துக்குமாரனைத் தனி புரக்க.

    351. (சந்தக்குழிப்பு) தனன தத்ததன தனன தத்ததன தானான. தத்தன தானனத் தாத்தன.