| உமிழு முக்குடுமி யயிறி ரித்துவரு | | வாய்வாண்ம ழுப்படை வீரனைப் பார்த்தனொ | | டுடலு மற்றொழிலி னறவி ளைத்துமெதிர் | | ஓடாது தற்றுகி ராதனைக் கூக்குரல் |
| விரிக டற்புடவி முழுது ணச்சமையும் | | ஓர்காளை கட்டுப்ர தாபனைக் கார்க்கடு | | விடமெ டுத்தரிய திருமி டற்றிலிடு | | காமாரி யைக்கவு மாரியைப் போற்றிரு | | விழிமு னிற்கும்வடி வழகு டைக்கடவுண் | | மாமோகி னிக்கும் ணாளனைச் சூக்கும் | | வெளியி னிற்பரம நடந விற்றுதிறல் | | வேளூர்வ யிதிய நாதனைப் போற்றுதும் |
| குரவு செச்சையொடு நறவு யிர்ப்பவிரி | | தேனாறு வட்டெழு மார்பனைப் பேய்த்திரள் | | குரவை யிட்டவுணர் தடிசு வைத்திடவொர் | | கூர்வேல்வி டுத்தகு மாரனைப் பார்ப்பதி |
(அடி, 1) மரகதம் - அம்பிகைபாகத்தின் ஒளி. மாமேரு - சிவபெருமான். வடபொருப்பு - மேருமலை. பினாகி - சிவபெருமான்; பினாகம் அவருடைய வில். முக்குடுமி அயில் - சூலம். வாய்வாள் - வாய்த்த கூர்மையையுடைய; வாள் - கூர்மை. பார்த்தன் - அருச்சுன்ன். உடலும் - போர்செய்த. மல் - மற்போர். அறளைத்தும் - மிக இளைத்தும். கிராதன் - வேடவடிவங் கொண்டவன்; இதன் விரிவு வி. பா. அருச்சுனன் தவநிலைச் சருக்கத்தால் அறியப்படும்.
(2) உண்ணும் பொருட்டுச் சமைந்த. ஓர் காளையென்றது திருமாலாகிய விடையை. ப்ரதாபம் - வீரத்தாலுண்டாகிய புகழ். கார்க்கடுவிடம் - கரிய நிறமுள்ள கடுமையாகிய விடத்தை. காமாரி - காமனுக்குப் பகைவன். கவுமாரி - உமாதேவியார். மோகினி - திருமாலின் அவதாரமாகிய மோகினி. மணாளன் - மணவாளனென்பதன் மரூஉ. சூக்கும வெணி - சூக்கும ஆகாசம். வேளூர்; இத்தலத்தின் பெயர்.
(3) குரவு - குராமலர். செச்சை - வெட்சிமலர். குரவை- குரவைக்கூத்து. தடி - மாமிசம். உரும் உக - இடியும் கெடும்படி. குளிறு - முழங்குகின்ற. காலாயிடம் - கோழிச்சேவல். உருக - உருகா நிற்ப. வெற்பவர் தம்மான் வள்ளிநாயகியார். மற்பொரு தோளென்றது தழுவும் செயலைக் குறித்தபடி.
|