| குமுதம் விண்டசுவை யமுத முண்டினிய | | கொழுநர் கொஞ்சுசிறு கிள்ளையைத் தாட்டுணை | | குறுகு தொண்டர்பிழை யறம றந்துபிறர் | | குணமி கழ்ந்ததக வில்லியைச் சேட்செலும் |
| எழுபெ ரும்புவன முழுதொ ருங்குதவும் | | இறைவி யென்றுமறை கையெடுத் தார்க்கவும் | | இடைநு டங்குமட நடையி ளங்குமரி | | எனவி ருந்தகன கள்வியைப் பூத்தவென் | | இதய புண்டரிக மலரி லெந்தையொடும் | | இனித மர்ந்தவொரு செல்வியைப் பாற்றொகும் | | இருவர் கண்கள்கது வரிய செஞ்சுடரின் | | இடம ருங்குடைய தையலைப் போற்றுதும் |
| முழுது ணர்ந்துமுணர் வரிய தொன்றையொரு | | மொழியின் விண்டசிறு பிள்ளையைச் சூர்ப்பெயர் | | முதுப ழம்பகையை யறவெ றிந்தவுணர் | | முதற டிந்ததனி வில்லியைப் பாட்டளி | | முரல விண்டதரு நிழறொ ழும்புகுடி | | புகவ ழங்குகொடை வள்ளலைப் போற்றடி | | முடியு மின்றிவெறு வெளிக டந்துமறை | | முடிவி னின்றுநிறை செல்வனைக் காத்தொறும் |
போலுங் கயல்” (தண்டி. சூ. 31, மேற்.) நவ்வி - மான்போன்றவளை. கோடு - யானைத் தந்தம். குவடு - மலை. சேற்றொளிர் குமுதம், “தூம்புடை நெடுங்கை வேழம்” (சீவக. 232) என்றது போன்றது; சேற்றொளிர் : குமுதமென்றதற்கு ஏற்ற அடை; குமுதம் : கீழுதடு. பிறர் - தொண்டரல்லாதவரது. தகவில்லி - நடுதிலை பிறழ்ந்தவர்.
(2) பால் தொகும் - பக்கத்திலுள்ள. இருவர் - திருமாலும் பிரமதேவரும். செஞ்சுடர் - சிவபெருமான் தையல்: இத்தலத்து அம்பிகையின் திருநாமம்; பாலாம்பிகை யென்று வடமொழியில் வழங்கும்.
(3) ஒன்றை - பிரணவப்பொருளை. விண்ட - சிவபெருமானுக்குச் சொன்ன. அவுணர் முதல் - அசுரர் குலத்தை. தருநிழலில். தொழும்பு - அடியவரான தேவர்கள்; ஆகுபெயர். அடியும் முடியும் இன்றி. கா - சோலை.
|