பக்கம் எண் :

264குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு


ஆசிரிய விருத்தம்
354.
பைங்காற் கமுகு செம்பழுக்காய்ப்
   பவள முதிர்ப்பக் கதிர்ச்செந்நெல்
பனிமுத் துகுக்குஞ் சோணாட்டின்
   பரிசு பாடி ஞிமிறிரைப்பக்

கொங்கார்த் திறைக்கு நறைக்காந்தள்
   குறிஞ்சி மலரோ டணிந்தநறுங்
குஞ்சிப் பெருமாள் வேதபுரிக்
   குமரப் பெருமா டனைக்காக்க

செங்காற் கருங்கட பைந்தொடியார்
   சிற்றாய்ப் பாடிப் பெருங்குடியில்
தீம்பா றிருடிக் கட்டுண்டு
   திரியா வண்ணந் திருத்தாதைக்

கங்காப் படங்கப் பாறயிர்நெய்
   அருந்தேன் கடலோ டிருந்துண்ண
அகிலம் படைத்துத் தனக்கேற
   அன்னம் படைத்த பெருமாளே.    
(6)

    (354. (அடி, 1) (பி-ம்.) ‘பைங்காய்க் கமுகு’. பழுக்காய் - செங்காய். பவளம்; உவமை. (பி-ம்.) ‘ஞிமிறிரப்ப’. உதிர்ப்பப் பாடி இரைப்ப. முத்தென்றது நெல்லை. முத்துப் பிறக்கும் இடங்களுள் நெல் ஒன்றாதலின் முத்தெனக் கொள்ளுதலும் பொருந்தும்.

    (2-3) வேதபுரி: இத்தலப் பெயர். பெருங்குடி - ஆயப்பாடியிலுள்ளார் ஐந்து லக்ஷமென்பராதலின் பெருங்குடி யென்றார்.

    (3-4) அங்காப்பு - உண்ணவேண்டி வாய்திறத்தல். பால் முதலிய ஒவ்வொன்றும் ஒரு கடலாக உள்ளது. ஏற - ஏறுதற்கு. அன்னம் - அன்னப் பறவை திருமாலுக்கு அன்னமொழிந்த பால் முதலியவற்றை யெல்லாம் படைத்துத் தனக்கு மிகுதியாக உண்ணம் அன்னத்தைப் படைத்துக்கொண்ட வென்றது ஒரு நயம்.

    (முடிபு.) அன்னம் படைத்த பெருமாள், குமரப் பெருமாடனைக் காக்க.