பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்265


வேறு
355.
கானாறு கற்பகக் காவுமூ வுலகுமக்
   காவென நிழற்றுமொற்றைக்
 கவிகையுங் குணதிசைக் காவலும் பிறவுமுள
   காணியுங் காணியாக
வானாறு கோட்டிமய மலைவயிறு வாய்தத்லை 
   மகளுக்கு மணமகற்கும்
 மருமகளை யுரியதன் திருமக ளெனப்பெற்ற
   மாமடிக ளைத்துதிப்பாம்
பானாறு செந்நெற் பசுங்கதிர் கறித்துமென் 
   பைங்குவளை வாய்குதட்டும்
 பணைமருப் பெருமைமடு மடிமடை திறந்ததீம்
   பாலாறு பங்கயச்செந்
தேனாறு டன்கடவுள் வானா றெனப்பெருகு 
   சித்தாமிர் தஞ்சிவபிரான்
 சீர்த்திப்ர தாபநிகர் தினகர புரித்தேவ
   தேவனைக் காக்க வென்றே.    
(7)

356.
மானிறக் கடவுடிரு மறுமார்பி ன்றவிரி
   வனத்துழாய்க் காடுமூடி
 மாயிருள் வழங்குதன் றிருமாளி கைக்கந்தண்
   மணிவிளக் கிட்டுமுட்டாட்

    355. (அடி, 1) தெய்வயானையம்மையைத் தன் மகளாகப் பெற்றமையின், கற்பகக்கா முதலியன அலைவின்றி இந்திரனுக்கே உரியனவாயின. காணி - உரிமை (384).

    (2) மருமகளென்றது தெய்வயானையம்மையை. மாமடிகள்: பெண்ணைக்கொடுத்த மாமனை மாமடிகளென்றல் மரபு (547); “மந்தணமிருது புரி மாமடிதன் வேள்வி, சிந்தவிளை யாடுசிவ லோகன்"(தே.)

    (3) மடு - மடுக்களில். மடியாகிய மடை (324.)

    (4) சித்தாமிர்தம் : கோயிலுக்குள் அம்பிகையின் சந்நிதிகு முன்னுள்ள விசேட தீர்த்தம். பாலாறு சீர்த்திக்கும், தேனாறு பிரதாபத்திற்கும் உவமைகள்; சீர்த்தி - மிகுபுகழ். புகழுக்கு வெண்ணிறமும் பிரதாபத்திற்குச் செந்நிறமும் கூறுதல் கவி மரப். தினகரபுரி: இத்தலத்தின் பெயர்.

    (முடிபு.) தேவதேவனைக் காக்கவென்று மாமடிகளைத் துதிப்பாம்.

    356. (அடி, 1) மால் - மேகம். திருவாகிய மறுவையுடைய மார்பு.