பக்கம் எண் :

266குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கானிறைக் குங்கமல வீட்டுக்கு நெட்டிதழ்க்
   கதவந் திறந்தளித்தும்
காதன்மை காட்டுங் கவுத்துவத் துடன்வந்த
   கன்னிகையை யஞ்சலிப்பாம்
மீனிறப் புணரியை விழுங்குங் கடற்றானை
   வெள்ளமொடு கள்ளமனமும்
மெய்யுமிரு ளத்திரளு மவுணக் கருங்கங்குல்
   விடியக் கடுங்குரல்விடும்
தீநிறக் குடுமிவெண் சேவலை யுயர்த்துவண்
   சிறைமயிற் பரிநடாத்தும்
சேவகப் பெருமாளை வேதபுரி வருமிளஞ்
   சேயைப் புரக்கவென்றே.    
(8)

357.
துறைபட்ட மறையவன் செந்நாப் படிந்துதன்
   சுதைநிறஞ் சிதைவுறாமே
தொன்மறை கனிந்தூறு மண்பனீ ரூறலிற்
   றூத்துகி ன்னைப்புறாமே
நறைபட்ட வெண்டோட்டு நளினப் பொகுட்டெமது
   நன்னெஞ் செனக்குடிபுகும்
ஞானப் பிராட்டியைச் சொற்கடற் றெள்ளமுதை
   நாத்தழும் பத்துதிப்பாம்

    (பரி.1:36, 4:59.) நற - தேன். மணிவிளக்கு - இரத்தின தீபத்தை.

    (அடி, 1-2) கவுத்துவம் சூரியன் போன்று விளங்குகின்ற தென்றபடி. மணிவிளக்கிட்டும், கதவந்திறந்தும் காதன்மை காட்டும்.

    (3.) இருள - இருளா நிற்ப அவணக் கருங்கங்குல் - அசுரராகிய கரிய இருளையுடைய இரவு.

    (4) குடுமி - சூட்டு. சேவகம் - வீரம்.

    (முடிபு.) சேயைப் புரக்கவென்று, கன்னிகையை அஞ்சலிப்பாம்.

    357. (அடி, 1) சுதை நிறம் - வெண்ணிறம். அண்பல் - பிரமதேவனுடைய மேல்வாய்ப்பால். (பி-ம்.) ‘அன்பனீர்’.

    (1-2) வெண்டாமரையிற் குடிபுகுந்தமையால் சுதைநிறம் சிதைதலும் துகில் நனைதலும் இல்லையாயின. பொகுட்டிற் குடிபுகும் என்க. ஞானப்பிராட்டியை - ஞானத்தை அளிப்பவளை. சொற்கடலிற் றோன்றிய அமுதை.