| சிறைபட்ட தண்டுறைசை சித்தாமிர் தப்பெருந் | | தீர்த்தந் திளைத்தாடிய | | செஞ்சுடர்க் கடவுளும் வெண்சுடர்க் கடவுளிற் | | றெள்ளமுத மயமாகலான் | | உறைபட்ட சுதைநிலவொ டிளவெயிலு மளவளாய் | | உண்ணச் சகோரம்வெஃகும் | | ஓங்கெயிற் பருதிபுரி முருகனைச் சண்முகத் | | |
சந்த விருத்தம் 358. | பயிறரு முதுமறை நூலைத் தெரித்தவள் | | பகைதொகு புரமெரி மூளச் சிரித்தவள் | | பனிவரை பகநெடு வேலைப் பணித்தவள் | | படுகடல் புகையெழ வார்விற் குனித்தவள் | | எயிறுகொ டுழுதெழு பாரைப் பெயர்த்தவள் | | எறிதரு குலிசம்வி டாமற் றரித்தவள் | | இடுபலி கொளுமொர்க பாலக் கரத்தினள் | | எனுமிவ ரெழுவர்க டாளைப் பழிச்சுதும் |
(3) செஞ்சுடர்க்கடவுள் - சூரியன். வெண்சுடர்க்கடவுளின் - சந்திரனைப்போல.
(4) உறை - துளித்தல். அளவளாய் - கலந்து. சகோரம் என்னும் பறவை நிலவையுண்பது.
(3-4) சித்தாமிர்த்ததில் நீராடிய விசேடத்தால் சூரியன் அமுதமாயினன். பருதிபுரி : சூரியன் இத்தலத்தில் வழிபட்டமையை இப்பெயர் வலியுறுத்துகின்றது.
(முடிபு.) சண்முகத் தொருவனைக் காக்கவென்று தெள்ளமுதை நாத்தழும்பத் துதிப்பாம்.
358. (சந்தக்குழிப்பு.) தனதன தனதன தானத் தனத்தன. (அடி, 1) தெரித்தவள்: அபிராமி; இப்பெயர் பிராமியென்றும் வழங்கும். சிரித்தவள்: மாகேசுவரி, பணித்தவள்: கௌமாரி. பனிவரை - கிரௌஞ்சமலை. குனித்தவள்: நாராயணி. (2) பெயர்த்தவள்: வாராகி. குலிசம் - வச்சிராயிதம். தரித்தவள்: இந்திராணி. கரத்தினள் : காளி.
|