பக்கம் எண் :

268குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கயறிரி சரவண வாவிக் கரைக்குரை
   கழலொடு பரிபுர மோலிட் டிடக்கட
களிறொடு களிறெதிர் மோத்த் திசைத்திசை
   கடுநடை யுளதக ரேறச் சமர்த்தனை
முயறரு கறையொடு தேய்வுற் றிளைத்தொரு
   முழுமதி குறைமதி யாகத் துகிற்கொடி
முகிறொடு தடமதில் வேதப் பதித்தனி
   முதல்வனை யறுமுக வேளைப் புரக்கவே.    
(10)


வேறு
359.
முறுக்குடை நறைச்சத தளத்திரு மலர்த்தவிசு
   சொர்க்கத் தலத்தோடு சேடசய னத்தையும்
முடித்தலை யடித்தலை பதித்தெதிர் துதித்தவர்த
   முக்குக் கொடுத்தானை மாதிரமொ ரெட்டையும்
இறைப்பொழு தினிற்பொடி படுத்தருள் கொடுக்கவல
   சத்திக்க ரத்தானை யூதியமெ னத்தனை
இருப்பினு நடப்பினு நினைப்பவ ரிருக்கவெமர்
   சித்தத் திருப்பானை யாறிருபு யத்தனை
வெறுப்பொடு விருப்பினை யறுத்தவ ருளத்துமலர்
   பத்மப் பத்ததானை வேதபுரி யிற்சின
விடைக்கொடி வலத்தினு மடக்கொடி யிடத்துமுள
   முக்கட் டிருத்தாதை யார்பணிகு ருக்களை

    (3-4) தகர் ஏறு அச் சமர்த்தனை. முழுமதி துவசத்தால் குறைமதியாயிற்று.

    (முடிபு.) அறுமுகவேளைப் புரக்க, எழுவர்கள் தாளைப் பழிச்சுதும்.

    359. (சந்தக்குழிப்பு.) தனத்தன தனத்தன தனத்தன தனத்தனன் த்ததத் தனத்தான தானதன தத்தன.

    (அடி, 1) முறுக்கு - இதழ்களின் பிணிப்பு. சததளத்திருமலர் - நூற்றிதழ்த்தாமரை. முடித்தலையைத் திருவடியில பதித்து. பிரம்பதவி, இந்திரபதவி, திருமால் பதவிகளைத் தம்மை வழிபடும் அடியார்களுக்கு அளிப்பவரென்பது கருத்து (384, 415.)

    (2) சக்தி - வேல். ஊதியம் என - இலாபமாக. தனையென்றது முருக்க் கடவுளை. இருப்பினும் நடப்பினும் நினைப்பவர்: “நின்று திருந்துங் கிடந்து நினைமினுகள், என்றுஞ் சிவன்றாளிணை”.

    (3) மடக்கொடி - உமாதேவியார். குருக்களை - ஆசிரியரை.