பக்கம் எண் :

270குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

திருக்கோல முடனொரு மணக்கோல மானவன்
    செங்கீரை யாடியருளே
செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள
    செங்கீரை யாடியருளே.    
(1)

361.
கும்பாதி காரிய மெனத்தமை நிமித்தமாக்
    கொண்டவகி லாண்டங்களின்
குழுவுக்கு மற்றுத்த மிருவர்குறி யுந்தலைக்
    கூடினுந் தான்றனக்கச்
சொம்பாதி யன்மைக் கனைத்துந்தன் மயமெனும்
    சுருதிகரி யாவைத்துமச்
சுருதிக்கு மெரிசுடர்ப் பருதிக்கு மிரவிகுல
    தோன்றற்கு மிளவலுக்கும்
சம்பாதி யொடுநற் சடாயுவுக்கும்பெருந்
    தவமுனிவ ரெழுவருக்கும்
தண்ணளி சுரந்திட்ட தீராத வினைதீர்த்த
    தம்பிரான் றிருமேனியிற்

நாயகியார். வள்ளி நாயகியின தந்தை தினைப்புனத்தில் இரண்டாமுறை வந்தபோது முருகக் கடவுள் கிழவுருவங்கொண்டதும், பின்பு அவளை விநாயகர் திருவருளால் அடைந்து மணக்கோலமானதுமாகிய செய்திகள் கந்த புராணம், வள்ளியம்மை திருமணப்படலம், 94-ஆம் செய்யுள் முதலியவற்றால் அறியப்படும்.

    361. (அடி, 1) கும்பாதிகாரியமென - கும்பம் முதலிய பொருள்கள் குயவன் முதலியோரை நிமித்த காரணமாகக் கொண்டாற் போல. தமை நிமித்தமாகக் கொண்ட - சிவம் சத்திகளாகிய தங்களை நிமித்தக் காரணமாகக் கொண்ட. குழுவுக்கு - தொகுதிக்கு. தாம் நிமித்த காரணமென்பதை அறிவிப்பற்கு. இருவர் குறி - ஆண் பெண்ணென்னும் சின்னங்கள். கூடினும் - கூடினாலும்; அதனால் அமைதி பிறவாமல்.

    (2) சொம் - சொத்துக்கள்; “சொம்மனை வைத்தெப் படி நடப்பீர்” (633.) பாதியன்மைக்கு - சிவத்திற்கு உரியபாதியும தனக்கே யுரியதென்பதைத் தெரிவித்தறபொருட்டு. அனைத்தும் தன்மயமென்னும் சுருதி - ‘ஸர்வம் சக்திமய’ மென்னும் வேத வாக்கியத்தை (86). கரி - சாட்சி. தோன்றல் - இராமன். இளவல் - இலக்குவன் (364).

    (3) சம்பாதி முதலியோர் இத்தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றோர். சம்பாதி சடாயு வழிபட்டதை, “தள்ளாய சம்பாதி சதாயென்பார் தாமிருவர், புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே” (தே.)