| செம்பாதி யுங்கொண்ட டையனா யகிகுமர | | செங்கீரை யாடியருளே | | செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள | | |
362. | கைக்கெட்டு மெட்டுக் களிற்றைப் பிடித்தக் | | களிற்றோடு முட்டவிட்டுக் | | ககனவட் டத்தினொடு பருதிவட் டத்தைவளை | | திகிரிவட் டத்திலித்து | | முக்கட் டிருத்தாதை கோதண்ட மெனவைத்த | | வேதண்ட மாதண்டமா | | மூதண்ட கூடந்த்ரி கூடத் தொடுஞ்சாடி | | மூரிக் கடாசலமவன் | | மெய்க்கிட்ட சட்டைக்கு நேரிட் டிடப்பட்ட | | மேகபட லத்துமொண்டு | | மேல்கட லினைக்கெருங் கீழ்கடல் புகப்பெய்து | | விளையாட்டு வீரர்களொடும் | | திக்கவட்டும் விளையாடு சேனா பதிக்கடவுள் | | செங்கீரை யாடியருளே | | செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள | | |
என்பதனால அறிக. தீராத வினை தீர்த்த தம்பிரான்; 449; “வேளூரர், எந்தவினை தீர்த்தா ரிவர்” (தனிப்.) என ஒரு புலவர் நிந்தாத்துதியாகக் கூறியது இப்பெயரை நினைப்பிக்கின்றது. செம்பாதி - நேர் பாதி : குறைவும் கூடுதலும் இல்லாத பாதி.
362. முருகப் பெருமான் திருவிளையாடல்கள் இதிற் கூறப்படும்.
(அடி, 1) பருதி வட்டம் - சூரிய மண்டலம். திகிரி வட்டம் - சக்கரவாளகிரி (34.)
(2) கோதண்டம் - வில். வேதண்டம் - மேருமலை. மா தண்டமா - பெரிய தண்டாயுதமாகக் கொண்டு. அண்டகூடம் அண்டத்தின் உச்சியை. த்ரிகூடம் - திரிகூடமலை. மூரி - பெரிய. கடாசலம் - யானை; இது முனிவர் வேள்வியிற் பிறந்தது.
(3) நேரிட்டிடப்பட்ட - ஒத்த. மேக படலத்து - மேகக் கூட்டத்தால். யானைத்தோல் மேகபடலத்துக்கு உவமை (வெங்கைக். 15.) வீரர் - நவவீரர் முதலியோர். மொண்டு பெய்து விளையாடு சேனாபதிக் கடவுளென்க.
|