363. | மைவிழிச் செங்கமல வல்லிக்கு நேமியான் | | மணிமார்பு வாணிக்குநான் | | மறைமுதலி செந்நாத் தடந்தைய லாளொடும் | | வயித்தியக் கடவுளார்க்கு | | மெய்விரிக் குந்தொண்ட ருள்ளத் தடத்தினொடு | | வேதச் சிரங்கடுப்ப | | வேதபுரி கந்தபுரி புள்ளூ ரெனப்பொலியும் | | வேளூர திசைதிசைதொறும் | | கைவகுத் தரமகளிர் குரவையாட் டயர்பெருங் | | கயிலைத் தடஞ்சாரலும் | | கனகாச லத்தும்வள ரியமா சலத்துமுயர் | | கந்தமா தனவெற்பெனத் | | தெய்வதப் பிடியொடும் விளையாடு மழகளிறு | | செங்கீரை யாடியருளே | | செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள | | |
364. | மீனேறு குண்டகழி தீவாய் மடுத்ததனி | | வில்லியா ரிளவலோடும் |
363. (அடி, 1) மறை முதலி - மறைக்கு முதல்வன்; முதலி: மூவர் முதலியென்றது போன்ற வழக்கு இது.
(2) வேதச்சிரம் - உபநிடதம். கடுப்ப - ஒப்ப.
(1-2) திருமாலின் மார்பு முதலியவற்றைத் திருமகள் முதலியோர் தமக்கு இடமாகக் கொண்டாற்போல வேளூரை இடமாகக் கொண்டோயென்பது கருத்து.
(3) கைவகுத்து - பிரிவு செய்து கொண்டு. குரவை யாட்டு - கை கோத்து ஆடுதலை. சாரலும் - சாரலிலும், கந்தமாதன வெற்பு - கயிலையைச் சார்ந்துள்ளதும் முருகக் கடவுளுக்குரியதுமான ஒருமலை (இலஞ்சியுலா, 129; தணிகையுலா, 93); தேவார வைப்புத்தலங்களுள் ஒன்றாகவும் உள்ளது; ‘கந்த மாதனங் கயிலைமலை கேதாரம்” (தே.) வெற்பென - வெற்பில் விளையாடுவது போல.
(4) மழகளிறு : அண்மை விளி.
(3-4) கந்தமாதன வெற்பில் விளையாடுவதுபோலக் கயிலைச் சாரலிலும், கனகாசலத்திலும், இமயாசலத்திலும் விளையாடும் மழகளிறென இயைக்க.
364. முருகக் கடவுள் மிகப் பெரியவராயிருந்தும் வள்ளி நாயகியின்பால் ஈடுபட்டு ஒழுகியது இதில் கூறப்படுகின்றது.
|