பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்273

விதிமுறை வணங்கச் சடாயுபுரி யிற்கருணை
   வெள்ளமென வீற்றிருக்கும்
ஆனே றுயர்த்திட்ட வையற்கு மம்மைக்கும்
   அருமருந் தாகிநின்ற
ஆதிப் பிரானென்று மும்மதற் கடவுளும்
   அடித்தொழும் பாற்றமற்றக்
கூனேறு மதிநுதற் றெய்வக் குறப்பெண்
   குறிப்பறிந் தருகணைந்துன்
குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக்
   குறையிரந் தவடொண்டைவாய்த்
தேனூறு கிளவிக்கு வாயூறி நின்றவன்
   செங்கீரை யாடியருளே
செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள
   செங்கீரை யாடியருளே.    
(5)

வேறு
365.
செம்பொன டிச்சிறு கிண்கிணி யோடு
   சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி
   திகழரை வடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தியொ டுஞ்சிறு
   பண்டி சரிந்தாடப்

    (அடி, 1) குண்டு - ஆழம். அகழியென்றது கடலை. வில்லியார் - இராமன். இளவல் - இலக்குவன். சடாயுபுரி: சடயு வழிபட்டமையின் இத்தலத்திற்கு இப்பெயர் அமைந்தது. வீறு - வேறொருவர்க்கு இல்லாத பெருமை.

    (2) ஐயன் : சிவபெருமான். மும்முதற் கடவுள் - பிரமன் முதலிய மூவர். ஆதிப்பிரானென்று அடித்தொழும்பாற்றவென இயைக்க (389.)

    (3) மதி - பிறை. குறப்பெண் - வள்ளிநாயகி. பணிக்க என - கட்டளை யிடுகவென்று. தொண்டை - கொவ்வைக்கனி.

    (4) வாயூறி நின்றவன் - மிக்க விருப்பங்கொண்டு நின்றவன்; விளி. “வேதா முதல்விண் ணவர்சூ டுமலர்ப், பாதா குறமின் பதசே கரனே” (கந்தரனுபூதி) என்றார் அருணகிரிநாதரும்.

    365. (அடி, 1) அரைமணி - அரையில் அணியும் ஒருவகை ஆபரணம்; இஃது உடைமணியெனவும் வழங்கும் (திருச்சிற். 385.)

    (2) பண்டி - வயிறு.