| பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் | | சுட்டி பதிந்தாடக் | | கம்பி விதம்பொதி குண்டல முங்குழை | | காது மசைந்தாடக் | | கட்டிய சூழியு முச்சியு முச்சிக் | | கதிர்முத் தொடுமாட | | அம்பவ ழத்திரு மேனியு மாடிட | | ஆடுக செங்கீரை | | ஆதி வயித்திய நாத புரிக்குகன் | | |
366. | குழையொடு குழையெதிர் மோதிக் காதணி | | குண்டலம் வெயில்வீசக் | | குமுத விதழ்க்கனி வாயமு தூறிய | | குறுநகை நிலவூர | | முழுவயி ரப்புய வலயமு முன்கை | | முதாரியு மொளிகால | | முத்த மரும்பி யெனக்குறு வேர்வு | | முகத்தி லரும்பியிடப் | | புழுதி யளைந்த பசுந்திரு மேனிப் | | பொங்கொளி பொங்கியெழப் | | புண்டரி கங்கண் மலர்ந்த விழிக்கடை | | பொழியருள் கரைபுரள |
(3) குழை காது - வடிந்த காது. சூழி - சூழியக் கொண்டை (360.) முச்சி - உச்சிக் கொண்டை.
(4) பவழத் திருமேனி; “பவழத் தன்ன மேனி” (குறுந். கடவுள்.) வயித்திய நாதமென்று வேறுதல முண்மையின், வேறுபாடு அறிதற்கு இதை ஆதி வயித்திய நாதபுரி யென்றார்.
366. (அடி, 1) குழை வேறு குண்டலம் வேறு. அமுதூறிய - அமுதூற (367.)
(2) புயவலயம் - வாகுவலயம்; வயிரம் அதற்கு அடை. முதாரி - முன்கைக் கங்கணம். அரும்பியிட - தோன்ற.
(3) புண்டரிகங்கள் மலர்ந்த - செந்தாமரை போல் மலர்ந்த ; ‘புண்டரீகமென்பது செந்தாமரைக்கும் பெயர்; புண்டரீகாட்சனென்ப’ (தக்க. 22, உரை) என்பதையும் அதன் விசேடக் குறிப்பையும் பார்க்க.
|