பக்கம் எண் :

276குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

சந்த விருத்தம்
368.
கும்பம தக்களி யானையி ரண்டே யொன்றேமைக்
கொண்டல்வி ழிக்கயன் மீனுமி ரண்டே கொண்டேகிச்
சம்பர னைப்பொரு சேவகன் வந்தான் வந்தான்முற்
சண்டைகொ ளற்கென நேர்வரு கெண்பா லன்பாயே
அம்பவ ளக்கொடி யேவளர் கொம்பே யென்றேநீ
அன்றுபு னத்துயிர் சோர்வது கண்டே முன்போதும்
கம்பம தத்தர்ச கோதர செங்கோ செங்கீரை
கந்தபு ரிக்கரு ணாநிதி செங்கோ செங்கீரை.
(9)

369.
திங்கணு தற்றிரு மாதொடு நின்றே மன்றாடும்     
  செங்கண்வி டைக்கொடி யோனருள் கன்றே யொன்றேயாய்
எங்களு ளத்தமு தூறுக ரும்பே யன்பாளர்க்
   கின்பம ளிக்குமெய்ஞ் ஞானம ருந்தே யெந்தாயின்

    368. (சந்தக் குழிப்பு.) தந்தன தத்தன தானன தந்தா தந்தான.

    தன்னை வெல்லுதற்கு மன்மதன் ஆண்வடிவத்தை விட்டுப் பெண் வடிவங்கொண்டு வந்ததாக வள்ளிநாயகியை நோக்கி முருகக் கடவுள் கூறியது இது.

    (அடி, 1-2.) யானை இரண்டு: நகில்கள். கொண்டல்: கூந்தல். ஏகிப்பொரு சேவகன் கொண்டு வந்தானென இயைக்க. சம்பரன்; ஓர் அசுரன்: இவனைக் கொன்றதனால் மன்மதனுக்குச் சம்பராரி யென்று ஒரு பெயர் உண்டாயிற்று. என - என்று நினைக்க. பெண்பால் - வள்ளி நாயகியினிடத்தே. “வெறுப்பினால், வேண்டுருவக் கொண்டதோர் கூற்றங்கொல் .... நல்கூர்ந்தார் செல்வ மகள்” (கலி. 56: 8-12); “பல்லுயிர் பருகும் பகுவாய்க் கூற்றம், ஆண்மையிற் றிரிந்துத னருந்தொழி றிரியாது.... பெண்மையிற் றிரியும் பெற்றியு முண்டென” (சிலப். 5:219-23) என்பவற்றைத் தழுவி வந்தது இது.

    (3) புனத்து - தினைப்பனத்தில்.

    (4) மதத்தர் - விநாயகர்.

    369. (அடி, 1) கன்றே - குழந்தையே.

    (2-3) எந்தாயின் ... வண்டே: உமாதேவியாருக்குச் சிவ பெருமான் உபதேசித்தபொழுது முருகக் கடவுள் அத்தேவியாருடைய கூந்தலில் வண்டின்வடிவாக இருந்து வேதமுதலியவற்றை அறிந்தனரென்று சைவ நூல்கள் கூறும்; “முன்பொரு நாள், நின்னுருவங் கோடலா னன்றே நெடு