பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்277

கொங்கலர் மைக்குழல் வாழ்பொறி வண்டே வண்டூதும்
கொந்தள க்குற மான்வளர் குன்றே யென்றோதும்
கங்கைம கட்கொரு கான்முளை செங்கோ செங்கீரை
கந்தபு ரிக்கரு ணாநிதி செங்கோ செங்கீரை.        
(10)

3. தாலப்பருவம்

ஆசிரிய விருத்தம்
370.
பில்கும் பசுந்தே னசும்பிருந்த
    பின்றா ழளகத் தரமகளிர்
பேதைக் குறும்பு விளையாடும்
    பேரா யத்துச் சிறுமருங்குற்
கொல்கொங் கொடிபோய் நுடங்கியிட
    ஓங்கும் பளிக்கு நிலாமுற்றத்
துயர்சூ ளிகையின் மரகத்ததின்
    ஒளிகால் வீசத் தெளிவிசும்பிற்
பல்குஞ் சுரபி தரங்கநெடும்
    பாகீ ரதியின் கரைக்கிளைத்த
பசும்புல் லெனச் செந் நாவளைக்கும்
    பைம்பொற்றலங்கள் பலகோடி
மல்குஞ் செல்வக் கந்தபுரி
    வாழ்வே தாலோ தாலேலோ
மலையாள் வயிறு வாய்த்தமுழு
    மணியே தாலோ தாலேலோ.    
(1)

வேலான், முன்னிய வேத முழுதறிந்தான்” ( கச்சியானந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது, 363-4.) குறமான் - வள்ளிநாயகி. மான்வளர்குன்றென்றது ஒரு நயம்.

    (4) ஒருவகைச் சம்பந்தம் பற்றிக் கங்கையை முருகக் கடவுளுக்குத் தாயென்றும் அதனால் இவருக்குப் போந்த பெயர் காங்கேயனென்றும் கூறுவர்.

    370. (அடி, 1-2) பில்கும் - துளிக்கும். பேதைக்குறும்பு - பேதைப்பருவத்து விளையாத்து. மருங்குற்கு ஒல்கும் கொடி - மென்மையிலும் துவட்சியிலும் இடைக்குத் தோற்று அசையும் பூங்கொடி. சூளிகை - மாளிகையின் உச்சியறை; சூடிகாவென்னும் வடமொழித்திருபு.

    (3) சுரபி - காமதேனு. பாகீரதியின் - ஆகாய கங்கையின். மரகத்ததின் ஒளியைப் புல்லென்று எண்ணிக் காமதேனு தன் நாவை நீட்டியது. இது திரிபதிசயவணி.