371. | தொடுக்குந் தொடைவெண் டுகிற்கொடிகள் | | தொடிநீர்ப் பரவை முகம்புழுங்கத் | | தோன்றும் பருதி மணித்திண்டேர் | | தூண்டுங் கலின வாம்பரியை | | முடுக்குஞ் சுடர்ப்பொற் றலத்திழைத்த | | முழுநீ லத்தி னொழுகொளியின் | | முழுகுங் கடவுண் மால்யானை | | முகிலிற் றோன்ற வகலிடநின் | | றடுக்குங் களிறென் றரமகளிர் | | ஐயுற் றிடத்தன் வெளிறுமுடம் | | பளறு படிந்த தெனக்கங்கை | | யாற்றுப் பசும்பொ னசும்புபுனல் | | மடுக்குஞ் செல்வக் கந்தபுரி | | வாழ்வே தாலோ தாலேலோ | | மலையாள் வயிறு வாய்த்தமுழு | | |
372. | தீற்றுஞ் சுதைவெண் ணிலவெறிப்பத் | | திரண்மா மணிகள் வெயில்விரிக்கும் | | செம்பொற் றலத்துப் பேரமர்க்கட் | | சிறியார் நறிய வகிற்புகையிட் | | டாற்றுங் குழற்காட் டினைப்புயலென் | | றாட மயில்கண் டம்பவளத் |
371. (அடி, 1) தொடை - மாலை. தொடு நீர்ப்பரவை - சகரரால் தோண்டப்பட்ட கடல் (373). புழுங்க - வெம்மையையடைய. கலினம் - கடிவாளம்.
(1-2) துகிற்கொடிகள் பரியை முடுக்கும் (49.) கடவுள் மாலை யானை - ஐராவதம். அது நீல மணியின் சோதியினால் கருமையகத் தோற்றியது. அகலிடம் - பூமி.
(2-3) தெய்வமகளிர் தன்னைப் பூமியிலுள்ள கரிய யானையென்று ஐயுறுவதை யறிது அந்த வெள்ளையானை தன்மேல் கரிய சேறு படிந்ததாக எண்ணிக் கங்கையில் மூழ்கியது.
372. (அடி, 1) தீற்றும் - பூசப்படும். சுதை - சுண்ணாம்புக் குழம்பு. சிறியார் - இளைய மகளிர்.
(2) மயில் ஆட என மாறி இயைக்க; கூந்தலை மேகமென்றெண்ணி மயில் ஆடியது. புன்னகையை நிலவெனக் கருதிச் சகோரம் அருந்தியது.
|