| தரும்பு நகையைச் சகோரப்புள் | | அருந்த விரிந்த முழுநகைவிண் | | டூற்று நிலவுக் கிந்துசிலை | | ஒளிர்மா ளிகையுஞ் சூளிகையும் | | உருகிப் பெருகுங் கலுழிவெள்ளம் | | உவரோ டுவரிக் கடற்புலவு | | மாற்றுங் கடவுட் கந்தபுரி | | வாழ்வே தாலோ தாலேலோ | | மலையாள் வயிறு வாய்த்தமுழு | | |
373. | கிளைக்குஞ் சகரர் தொட்டபெருங் | | கிடங்கென் றுடங்கர் மாவியங்கும் | | கீழ்நீ ரழுவக் குண்டகழிக் | | கெழுமு புனற்றெண் டிரைமேய்ந்து | | திளைக்குங் கமஞ்சூ னெடும்புயலைச் | | சிறுகட் பெருங்கைப் பகடென்றோர் | | செங்கட் களிறு பிளிறநிமிர் | | திகிரி கிரியென் றிவர்ந்துடலம் | | இளைக்கும் படிவிண் டொடநிவந்த | | எழிற்பொற் புரிசை விண்டுபதத் | | தேறு மேணி பொற்றருவுக் | | கிடுவே லியுமா யேழுலகும் |
(2-3) முழுநகை விண்டு ஊற்றும் நிலவுக்கு; விந்து - வெளிப்பட்டு.முழுநகையில் உண்டாகிய நிலவினால் சந்திரகாந்தக்கல் உருகியது. உவரோடு புலவை மாற்றும் (அடி, 4.)
373. (அடி, 1) பெருங்கிடங்கென்றது கீழ்க்கடலை. இடங்கர்மா - முதலையாகிய விலங்கு; முதலையை மாவென்பது ஒரு சாரார் கொள்கையாதலின் (இறை. சூ. 1, உரை.) இடங்கர்மா என்றார். கீழ்நீர் - ஊற்று நீரையுடைய. அழுவம் - பரப்பு. மேய்ந்து - உண்டு என்னும் பொருளது; “களிற்றீட்டம் போற், கலங்கு தெண்டிரை மேய்ந்து” (சீவக. 32.)
(2) கம சூல்; கம - நிறைவு. புயலைப் பகடென்று கருதி; பகடு யானை. களிறு பிளிற - ஓர் ஆண்யானை முழங்க. திகிரிகிரியென்று - சக்கரவாளமலை என்று மதிலை நினைந்து. இவர்ந்து - மதிலின்மீது ஏறி.
(3) மேகம் இளைக்கும்படி. விண்டுபதம் - ஆகாயம். பொற்றரு - கற்பக மரம்; “கால்கிளர் விசும்பிற் கற்பகா (3) மேகம் இளைக்கும்படி. விண்டுபதம் - ஆகாயம். பொற்றரு - கற்பக மரம்; “கால்கிளர் விசும்பிற் கற்பகா டவிக்கு, வேலியிட்டன்ன வியன்மணிப் புரிசையும்” (566:24-5.)
|