| வளைக்குங் கடவுட் கந்தபுரி | | வாழ்வே தாலோ தாலேலோ | | மலையாள் வயிறு வாய்த்தமுழு | | |
374. | சோலைப் புறமுப் புடைக்கனிகள் | | தூக்கு முடத்தெங் கிமையவர்தம் | | தோன்ற றிருவோ லக்கத்துத் | | தோகை மயிலி னடங்குயிற்றும் | | ஏலக் கருங்கொந் தளவளகத் | | திளமா தருக்கு முதிர்வேனில் | | இளைப்பாற் றுதற்குத் தாற்றொடுஞ்செவ் | | விளநீர் கொடுப்ப வீற்றுளைந்த | | காலப் புயலின் முகந்துடைக்கும் | | கமுகு பழுக்காய்ப் பவழமுடன் | | கதிர்முத் திட்டுச் செழும்பாளைக் | | கற்றைக் கவரி புடையிரட்டும் | | மாலைப் பழனப் பருதிபுரி | | வாழ்வே தாலோ தாலேலோ | | மலையாள் வயிறு வாய்த்தமுழு | | |
(3-4) புரிசை வளைக்கும்; புரிசை - மதில்.
374. (அடி, 1) முப்புடைக் கனிகள் - தென்னம் பழம். “தென்னம் பழம்வீழ் சோணாடா” (424); “காய்மாண்ட தெங்கின பழம்வீழ” (சீவக. 31.) முடத்தெங்கு; எழுவாய். இமையவர்தம் தோன்றல் - இந்திரன். திருவோலக்கத்து - அத்தாணி மண்டபத்தில். மயிலின் - மயிலைப் போல.
(2) ஏலம் - மயிர்ச்சாந்து. கொந்தள அளகம் - கொத்தாகிய முன்னுச்சி மயிர். இளமாதருக்கு - இளைய அரம்பையருக்கு. தாறு - காய்க்குலை. இளைப்பாற்றுதற்குக் கொடுப்ப. ஈற்று உளைந்த - ஈனுதலால் வருந்திய.
(3) கதிர்முத்தென்றது பாளையிலுள்ள பூ வரும்புகளை. பாளையாகிய கவரியை. மாலை - வரிசை.
(1-4) தெங்கு இளநீர் கொடுப்பக் கமுகு அரம்பையருக்குக் கவரி புடையிரட்டும் பழனமென்க. கமுகு கவரி வீசுதல்: 58.
|