வேறு 375. | மாலி மயத்து மடப்பிடி பெற்று | | வளர்த்த விளங்களிறே | | மழவிடை யேதிரு மாமடி கட்கென | | வைத்த கவுத்துவமே | | மூல மெனக்குல நான்மறை யோலிடு | | முழுமுத லேமூவா | | முக்கட் கனிகனி யுஞ்சுவை யேதனி | | முத்திக் கொருவித்தே | | காலை யிளங்கதி ருக்கெதிர் முதிரும் | | கதிர்செம் பவளமுடன் | | கதிர்முத் திட்டுவ ணங்கக் கன்னல்கொல் | | கமுகுகொ லெனவளரும் | | சாலி வயற்றிமிழ் வேளூ ரடிகேள் | | தாலோ தாலேலோ | | சங்கத் தமிழின் றலைமைப் புலவா | | |
376. | கருமுகி லுக்கரி தாமடி வாரம் | | கண்டிரு பறவைகடம் |
375. (அடி, 1) மாமடிகளென்றது திருமாலை; 355-ஆம் செய்யுட் குறிப்பைப்பார்க்க. திருமாலுக்குக் கவுத்துவம் விருப்பமுடையதாதலின் இவரைக் கவுத்துவ மென்றார்.
(2) ஓலிடும் - ஓலமிடும். முக்கட் கனி - சிவபெருமான்.
(3) கதிர்முத்து : 354, பார்க்க. பெரியோரைக் கண்டால் காணிக்கைப் பொருளையிட்டு வணங்குதல் மரபென்பது இங்கே அறியற்பாலது. நெற்பயிருக்குக் கரும்பும் கமுகும் உவமைகள்; கன்னல் - கரும்பு.
(4) சாலி - நெற்பயிர். சங்கத் தமிழின் தலைமைப் புலவா: தலைச் சங்கத்தில் முருகக் கடவுள் இருந்து தமிழாராய்ந்தமையினி இங்ஙனம் கூறினார்; “அவருள் தலைச்சங்க மிருந்தார் .............குன்றெறிந்த மருகவேளும் ........என இத் தொடக்கத்தார் .......என்ப” (இறை. 1. உரை.)
376. (அடி, 1-2) சிவபெருமானைப் பொன்மலையாக உருவகம் செய்கின்றார். கருமுகிலுக்கு - திருமாலுக்கு. அடிவாரம் - திருவடி, மலையின்
|