(ஆசிரிய விருத்தம்) 7. | மேகப் பசுங்குழவி வாய்மடுத் துண்ணவும் | | விட்புலம் விருந்தயரவும் | | வெள்ளமுதம் வீசுங் கருந்திரைப் பைந்துகில் | | விரித்துடுத் துத்திவிரியும் | | நாகத்து மீச்சுடிகை நடுவட் கிடந்தமட | | நங்கையைப் பெற்றுமற்றந் | | நாகணைத் துஞ்சுதன் றந்தைக்கு வந்துதவு | | நளினக் குழந்தைக்காக்க | | பாகத்து மரகதக் குன்றொன்றொர் தமனியக் | | குன்றொடு கிளைத்துநின்ற | | பவளத் தடங்குன் றுளக்கண்ண தென்றப் | | பரஞ்சுடர் முடிக்குமுடிமூன் | | றாகத் தமைத்துப்பி னொருமுடிதன் முடிவைத் | | தணங்கரசு வீற்றிருக்கும் | | அபிடேக வல்லியை யளிக்குல முழக்குகுழல் | | |
கிரீவம் - கழுத்து; (பி-ம்.) ‘கிரீபம்’. அழகிய சொக்கர்: சோமசுந்தரக் கடவுள் திருநாமம் (108, 157); சொக்கர் - பேரழகுடையவர். தோட்டிகல் - காதணியோடு பொருகின்ற.
7. (அடி, 1) விட்புலம் - வானோர்; ஆகுபெயர். வெள்ளமுதம் - வெள்ளிய நீர், வெள்ளிய அமிர்தம். திரையாகிய துகில், உத்தி - படப்பொறி.
(2) நாகத்து மீ - ஆதிசேடனாகிய நாகத்துக்கு மேல். சுடிகை நடுவண் - உச்சிக்கு நடுவில். நங்கை - பூமிதேவி. தன் தந்தை யென்றது திருமாலை. நளினக் குழந்தை - தாமரை மலர் மேலுள்ள பிரமதேவர்.
(3) பாகத்து - பக்கத்தில். மரகதக்குன்று: திருமால். தமனியக் குன்று: பிரமதேவர். பவளத்தடங்குன்று: சிவபெருமான். சிவபிரானுடைய வலப்புறத்துப் பிரமனும் இடப்புறத்துத் திருமாலும் தோன்றுவராதலின் இங்ஙனம் குறித்தனர்; ஏகபாத ருத்திர மூர்த்தியைக் குறித்த தெனலுமாம். முடிமூன்றென்றது மூன்று நகில்களை.
(4) ஆகம் - மார்பு. அணங்கரசாக வீற்றிருக்கும் வீற்றிருத்தல் - கவலையின்றியிருத்தல். அளிக்குலம் - வண்டின் தொகுதி.
|