| விண்ணொடு மண்ணை விழுங்கி யருட்கதிர் | | விரியு மிளஞ்சுடரே | | மெய்ப்புலன் மேய்ந்து சமைந்ததொர் வீட்டை | | விளக்கும் விக்கொளியே | | புண்ணிய நாறுமொர் பெண்கனி கனியும் | | புனித நறுங்கனியே | | புள்ளூ ரெனவெம துள்ளத் தடநிறை | | புத்தமு தக்கடலே | | தண்ணொளி பொங்கிய கருணா நிதியே | | தாலோ தாலேலோ | | சங்கத் தமிழின் றலைமைப் புலவா | | |
சந்த விருத்தம் 378. | தோலாத முத்தமிழ் நாவா மூவா மாவாமச் | | சூர்வே ரறத்தொடு வேலா நூலா நூலோதும் | | சீலாம லைக்கொடி பாலா கீலா மேலாகும் | | தேவாதி பற்கொரு தேவா வோவா தேகூவும் | | காலாயு தக்கொடி வீறா வேறா வேறேறும் | | காபாலி பெற்றகு மாரா வீரா பேராளா | | சேலார்வ யற்குரு கூரா தாலோ தாலேலோ | | சேனாப திப்பெரு மாளே தாலோ தாலேலோ. |
(2) மெய்ப்பலன் ............வீடு: (292); மெய்ப்புலன் - சத்தியஞானம்.
(3) புண்ணியம் நாறும் - முப்பத்திரண்டு தர்மங்களைச் செய்த. பெண்கனி - உமாதேவியார். அம்பிகை அறம் வளர்த்ததைத் தருமசம்வர்த்தனி என்னும் திருநாமத்தாலும், “இல்லாளே முப்பத் திரண்டறமுஞ் செய்திருப்ப” (617) என இந்நூலாசிரியர் கூறுவதனாலும் உணரலாகும்.
378. (சந்தக்குழிப்பு.) தானா தனத்தன தானா தானா தானான.
(அடி, 1) மூவா மாவாம் அச்சூர் - அழியாத மாமரமாகிய அந்தச் சூரபன்மன். நூலா நூல் - வேதம்; வேதம் சுயம்புவென்றபடி; நூற்றல் - நூல் செய்தல்; “நொய்தி னொய்யசொன் னூற்கலுற்றேன்” (கம்ப. பாயிரம்.) (2) கீலா - எல்லாவற்றிற்கும் மூலமாக உள்ளவனே; கீலம் - முளை. தேவாதிபற்கு ஒரு தேவன் - சிவகுரு; தேவாதிபன் - இந்திரனுமாம். (3) காலாயுதக்கொடி - கோழிக் கொடி. வீறு - வேறொருவருக்கில்லாத சிறப்பு. ஏறா ஏறு - பிறரால் ஏறப்படாத இடபம்.
|