379. | ஊனாயு யிர்க்குயி ரானாய் தாலோ தாலேலோ | | ஓதாது ணர்த்திடு போதா தாலோ தாலேலோ | | ஆனாவ ருட்கனு பானா தாலோ தாலேலோ | | ஆயாத சொற்சொலு பாயா தாலோ தாலேலோ | | நானாயெ னக்கரி தானாய் தாலோ தாலேலோ | | நாதாதி கட்கனு பூதா தாலோ தாலேலோ | | தேனார்பொ ழிற்குரு கூரா தாலோ தாலேலோ | | சேனாப திப்பொரு மாளே தாலோ தாலேலோ. |
4. சப்பாணிப் பருவம்
380. | முடங்குந் திரைப்பரவை வயிறுளைந் தீன்றநறு | | முளரிப் பிராட்டிவைத்து | | முத்தாடு பச்சைப் பசுங்கிள்ளை யெனமழலை | | முதிருமென் குதலைகற்பத் | | தொடங்குங் குறப்பாவை கற்றைக் குழற்க்கிற் | | றூம்மொடு தாம்மிட்டுச் | | சுடிகைநுதல் வெயர்வுந் துடைத்தொழுகு கத்தூரி | | தூரியங் கொண்டு தீட்டிக் | | குடங்கைக் கடங்கா நெடுங்கட் கடைக்கழகு | | கூரவஞ் சனமெழுதிமென் | | கொங்கைத் தடத்துப் பசுங்களப மப்பியவள் | | குற்றேவன் முற்றுமாற்றித் |
379. (அடி, 1) ஓதாது உணர்த்திடு போதன் - மௌன தேசிகன்.
(2) அனுபானா - துணையாக உள்ளவனே. ஆயாத - ஆராய்ச்சி செய்தற்கியலாத.
(3) அரிது - அரிய பொருள். அனுபூதன் - காரணன்.
380. முருகக் கடவுள் வள்ளி நாயகியாரைப் பலவகையாக உவப்பிக்கும் செய்தி கூறப்படும்.
(அடி, 1-2) முடங்கும் திரை - மடங்கும் அலை. முளரிப் பிராட்டி - திருமகள். முத்தாடுதல், முத்தமிட்டுப் பாராட்டுதல். வள்ளிநாயகி திருமாலுக்கு மகளாதலின் திருமகள் முத்தாடுவதாக்க் கூறினர். முத்தாடு குறப்பாவை, தொடங்குங் குறப்பாவை என்க. தூரியம் - எழுதுகோல்; இது தூரிகை யெனவும் வழங்கும்.
(3) குடங்கை - உள்ளங்கை. குடங்கைக்கடங்கா நெடுங்கண்; 404. கூர - மிகும்படி. (பி-ம்.) ‘கொங்கை தடத்தும்’.
|