பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்285

தடங்குங் குமப்புயங் கொட்டிநட மிட்டவன்
சப்பாணி கொட்டியருளே
தையனா யகிமருவு தெய்வநா யகன்மதலை
சப்பாணி கொட்டி யருளே.    
(1)

381.
மழைக்கொந் தளக்கலப மயிலிளஞ் சாயனெடு
   மதரரிக் கெண்டையுண்கண்
மான்கன்றை யமருலகு வாழப் பிறந்திடு
   மடப்பிடியை வானவில்லைக்
குழைக்குந் தடக்கைத் திருத்தாதை நீரொடு
   கொடுப்பக் குடங்கையேற்றுக்
கொழுமலர் மணங்கமழ் மணப்பந்தர் நிற்பவக்
   கொம்புமின் கொடியினொல்கி
இழைக்கும் பசும்பொற் பசும்பென வசும்புபொன்
   னிளமுலை முகங்கோட்டிநின்
றெய்யாமை நோக்கும் படைக்கட் கடைக்கணோக்
   கின்னமுத மூற்றவின்பம்
தழைக்கும் பெருங்காதல் வெள்ளந் திளைத்தவன்
   சப்பாணி கொட்டியருளே
தையனா யகிமருவு தெய்வநா யகன்மதலை
     சப்பாணி கொட்டியருளே.        
(2)

    (4) புயங் கொட்டியது களிப்பின் மிகுதியால்.

    381. தெய்வயானை யம்மையாரை மணந்தருளிய செய்தி கூறப்படும்.

    (அடி, 1) மழைக் கொந்தளம் - மேகம் போன்ற கூந்தல். கொண்டளத்தையும் சாயலையும் கண்ணையும் உடைய மான்கன்று; தெய்வயானை யம்மையார். வானவில் - இந்திரவில்.

    (2) குழைக்கும் - வளைக்கும். திருத்தாதை - இந்திரன். அக்கொம்பு - தெய்வயானையம்மையார்.

    (3) பசும்பொற்றசும்பு - பசும்பொன்னாலாகிய குடம். கோட்டி - வளைத்து. நாணத்தால் முகங் கோட்டினாள். எய்யாமை நோக்கும் - பிறரறியாதவாறு பார்க்கும்.

    முருகக் கடவுள் தெய்வயானையை மணந்தபோது மணப்பந்தரில் அத்தேவியார் அக்கடவுளைக் கடைக்கண்ணால் பிறர் அறியாதவாறு பார்த்தனர்; இங்ஙனம் பார்த்தல் மகளிர் இயல்பு; ஐயனை யகத்துவடி வேயல புறத்தும், கைவளை திருத்துபு கடைக்கணி னுணர்ந்தாள்” (கம்ப. கோலங்காண். 37.)