பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்287

383.
மடநடைத் தெய்வக் குறப்பாவை திருவுருவின்
   மயிலிளஞ் சாயலுநிலா
மணிவட மறப்புடைத் திறுமாந்த கனதன
   வனப்புங் குறித்துநோக்கி
இடுகிடைப் பாவிக் கினிப்பிழைப் பில்லைகொல்
   எனத்திரு வுளங்குழைந்தாங்
கேந்திளங் கொங்கையை யிணைப்புயத் தேந்திநின்
   றெல்லா வுறுப்புநிற்கக்
குடமுலைக் கேயிவள்குடிப்பிறப் புக்கியை
   குணங்கிடைத் ததுகொலென்றக்
கோதைநெடு நாணெய்த வவயவங் கட்குள
   குணாகுணந் தனிதெரிக்கும்
தடமலர்க் கைத்தலஞ் சேந்தொளி துளும்பவொரு
   சப்பாணி கொட்டியருளே.
தையனா யகிமருவு தெய்வநா யகன்மதலை
   சப்பாணி கொட்டியருளே.    
(4)

384.
விண்ணென் கடற்புவன முடவுப் படத்தேந்து
   வேந்துபொலி பாந்தள்வைப்பும்
விரிநீர் வரைப்புமெழில் விஞ்சைய ரிருப்புமுகை
   விண்டுநறை விரிமுண்டகக்

    383. (அடி, 1) சாயல் - மென்மை. இடுகு - சுருங்கிய. இடையாகிய பாவி; பாவியென்றது இரக்கத்தைக் குறிக்க வந்தது. திருவுருவின் மென்மையை முழுதும் நோக்கி அவ்வுருவில் நகில் மாத்திரம் இடைக்குக் கேடு விளைப்பதை நினைந்து அவற்றை ஏந்தினர்.

    (3-4) குடிப்பிறப்புக்கு இயை குணம் - கொலை செய்யும் இயல்பு; குறவர் தறுகண்மையோடு மான் முதலியவற்றைக் கொலை புரியும் இயல்புடையார்; இங்கே நகில் இடையை அழிக்கும் வண்ணம் இருத்தலின் இது கூறினார். தனி தெரிக்கும் - தனித்தனியே சுட்டிக்காட்டித் தெரிவிக்கும்.

    384. முருகக் கடவுள் தம்மைப் பணியும் அடியார்களுக்கு நாகலோக ஆட்சி முதலிய சிறந்த பதவிகளை அருளுதலும் தாம் குறிஞ்சி நிலத்துக்கு உரிமை பூண்டிருத்தலும் கூறப்படும்.