பக்கம் எண் :

288குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கண்ணன் றிருப்பதமு நான்முகக் கடவுள்பூங்
   கஞ்சமுங் குலிசப்பிரான்
கற்பகக் காவுநின் றொண்டர்க டொழும்புக்கொர்
   காணியா வைத்துமற்றத்
திண்ணென் றடக்கைவெஞ் சிலைவேடர் குடிகொண்ட
   சீறூரு மூரூர்தொறும்
செந்தினைப் புனமூடு தண்சாரல் பிறவுமாம்
   சீதனக் காணிபெற்றத்
தண்ணெண் குறிஞ்சித் தலந்தலை யளிப்பவன்
   சப்பாணி கொட்டியருளே
தையனா யகிமருவு தெய்வநா யகன்மதலை
    சப்பாணி கொட்டியருளே.    
(5)

வேறு
385.
கடலைச் சுவற வடித்து மிடித்துக்
   கனவரை துகள்கண்டும்
கடிதிற் றரிய வகுப்பதை யொப்பக்
   காரவு ணக்கடலின்
உடலிற் பெருகிய குருதிக் கடல்பிண
   வோங்கலொ டோங்கவமைத்
தொட்டிய வொட்டல ரிறிப்ற கிட்டவர்
   ஒழியப் பிறரையெலாம்

    (அடி, 1-2) விண் என் - விண் என்னும் ஒலியைச் செய்கின்ற. முடவுப் படம் - முடங்குதலையுடைய படம்; “முடவுப் படப்பாய்ச் சுருட்டு” (3.) வேந்து - ஆதிசேடன். பாந்தள் வைப்பு - நாகலோகம்; இது போகத்தாற் சிறப்புப் பெற்றது. விரிநீர் வரைப்பு - பூவுலகம். விஞ்சையர் இருப்பு - வித்தியாதரருலகம். கண்ணன் திருப்பதம் - திருமால் பதவி. கஞ்சமென்றது பிரமலோகத்தைக் குறித்து நின்றது; “தனி விரிஞ்சன் முளரி சென்று புகுதுமே” (தக்க. 240) என்பதையும், ‘முளரி யென்பதனைப் பிரமலோகமெனினும் அமையும்’ என்னும் அதன் உரையையும் காண்க. குலிசப் பிரான் - இந்திரன். தொழும்புக்கு ஓர் காணியா - செய்த தொண்டுக்கு உரிமையாக.

    (3-4) சீதனக் காணி - ஸ்திரீ தனமாகிய காணி; மாமனாராற் கொடுப்பக்கடுவது. முருகக் கடவுள் குறிஞ்சிக் கடவுளாதலின் ‘குறிஞ்சித்தலந் தலையளிப்பவன்’ என்றார்.

    385. (அடி, 1-2) கனவரை - கிரவுஞ்சமலை. திரிய - மீட்டும் (206.) பிண ஓங்கல் - பிணமாகிய மலை. ஒட்டிய ஒட்டலர் - வஞ்சனம் கூறி எதிர்த்த பகைவர். பிறகிட்டவர் - புறங்காட்டி ஓடியவர்.