| தடவுத் தாழியின் மத்தெறி தயிரிற் | | றத்துதி ரப்புனலிற் | | றசைகுடர் நிணமொடு மூளை குழம்பச் | | சமர்விளை யாடல்செயும் | | குடுமிச் சுடர்வடி வேலைத் தொட்டவ | | கொட்டுக சப்பாணி | | கொழிதமிழ் வேத புரிக்கும் ரேசன் | | |
386. | சமரிற் பட்டவர் வெட்டிய பூதத் | | தலைவர்க ணிற்பமுதற் | | றாமரை நாயகன் வயிறு கிழித்துத் | | தந்தொழி றலைநின்றாங் | | கமரிற் குரிய மடக்கொடி யாரை | | அலைத்தனர் பற்றியெயிற் | | றவுண ரெனத்தமை யுணரார் கணவர்கள் | | ஆர்ப்பில் வெடித்தபெருங் | | கமரிற் குருதி பிலத்தை நிரப்பிடு | | களமெதிர் கண்டினியக் | | காரவு ணக்கடல் சூரொடு மாளக் | | கடிதிற் றடிதியடற் | | குமரக் கடவு ளெனப்பணி வேலவ | | கொட்டுக சப்பாணி | | கொழிதமிழ் வேத புரிக்கும் ரேசன் | | |
(3) தடவுத்தாழி - பெரிய மண் பானை. தயிரிற் குழம்ப.
386. போர்க்களத்தில் இறந்துபட்ட அசுரர்கள் தேவராய் வீரசுவர்க்கத்தை யடைந்து, ‘அசுரர் கூட்டத்தை அழிப்பாயாக’ என்று தாமே முருகக் கடவுளை வேண்டுவரென்பது கூறப்படும்.
(அடி, 1-2) சமரிற்பட்டவர் - போரில் இறதவர்கள். பூதத் தலைவர்கள் - தம்மைக் கொன்ற பூதகணத் தலைவர்கள்; இவர்கள் முருகக் கடவுளின் படையைச் சார்ந்தவர்கள். தாமரை நாயகன் - சூரியன். வீரசுவர்க்கம் அடைபவர் சூரிய மண்டலத்தைக் கீண்டு செல்லும் செய்தி 382-ம் செய்யுளிலும் கூறப்பட்டது. அமரிற்கு உரிய மடக்கொடியார் - போரில் இறந்தோர் பெறுவதற்குரிய வீரசுவர்க்கத்திலுள்ள தெய்வ மகளிர். கணவர்கள் ஆர்ப்பில் - பூதகணத்தினர் செய்த ஆரவாரத்தினால்.
(3-4) கமர் - வெடிப்பு. களம் - போர்க்களம். தடிதி - கொல்வாயாக குமரக் கடவுள்: விளி.
|