387. | அற்ற வுடற்குறை யிற்ற முடித்தலை | அங்கைத் தலம்வைத்திட் | டாடு பறந்தலை யோடுதி ரப்புனல் | ஆறு கடத்துகெனும் | சிற்றல கைக்கொரு பேரல கைப்பெண் | தேரழி யக்கழியும் | திகிரிப் பரிசில் விடப்படு சுழியிற் | றெருமரல் மட்பகைஞன் | பற்றிய திரிகை திரித்து விடத்திரி | பரிசென வுஞ்சுழலும் | பம்பர மெனவும் வரும்படி யவுணர் | படக்கள வேள்விசெயாக் | கொற்ற மகட்புண ருஞ்சுடர் வேலவ | கொட்டுக சப்பாணி | கொழிதமிழ் வேத புரிக்கும ரேசன் | | | | | | | | | | | | | | | | |
சந்த விருத்தம் 388. | வளரிள வனமுலை மலைமக ளுக்கொர் தவப்பேறே | மறிதிரை பொரநிமிர் கருணை கொழித்த பெருக்காறே | அளியுமி னமுதெழு வெளியினில் வைத்த சுவைத்தேனே | அறமுது தவமொடு வளர வளர்த்திடு நற்றாயே | | | |
387. (அடி, 1) உடற்குறை: எழுவாய். இற்ற - வெட்டப்பெற்ற. தன் தலையையே கையில் வைத்து உடற்குறை ஆடியது.
(2) அலகை - பேய். தேர்ச்சக்கரத்தையே பரிசிலாக விட்டது. தெருமரல் - சுழலுதல். மட்பகைஞன் - குயவர்.
(3) திரிகை - சக்கரம். திரி பரிசெனவும் - சுழலும் தன்மையைப் போலவும். அவுணர்பட - அசுர்ர்கள் இறந்துபட. களவேள்வி செய்தல் - பகைவரை வென்று போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்டு வேட்டல்; இது வாகைத் திணைத்துறைகளுள் ஒன்று (437); புறநானூறு, 26-ஆம் செய்யுளைப் பார்க்க.
(4) கொற்ற மகள் - வீரத்திரு.
388. (சந்தக் குழிப்பு.) தனதன தனதன தனதன தத்த தனத்தானா.
(அடி, 1) மலைமகள் - உமாதேவியார். பேறு - பயன். மறிதிரை - மடங்கி வருகின்ற அலை.
|