| சருகு நாறு முடைத்தலையின் | | தாம நாறு திரடிண்டோட் | | டாதையாருங் கண்டுகண்டு | | தடங்கண் களிப்பக் குரவுரிந் | | தருகு நாறு திருமேனி | | அந்தீங் குதலை மழலைகனிந் | | தமுத மூறு பசுந்தேறல் | | அசும்பு நாறத் தெய்வமண | | முருகு நாறுஞ் செங்கனிவாய் | | முத்தந் தருக முத்தமே | | மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி | | |
391. | நறவு விரிந்த விரைத்தோட்டு | | நளினத் தொட்டிற் றடமுலைப்பால் | | நல்கி வளர்த்த கைத்தாயர் | | நகைவாண் முகத்து மார்பகத்தும் | | குறுமெ னடைய சிறுபசுங்காற் | | குருதி ததும்ப வுதைந்துசில | | குறும்பு செயத்தா ணோமெனமென் | | கோல்கொண் டோச்சப் பெரும்புவனம் | | நிறுவு மொருநின் பெருந்தன்மை | | நினைந்தாய் போலக் கனிந்தமுது |
(2) துழாய்ச்சருகு நாறு தலை - திருமாலின் தலை; “கருதயன்மால், தருதலையாக வம்மான்” (திருக்குடந்தைத் திரிபந்தாதி.) குரவு - குராமலர்.
(1-2) கொம்பும் தாதையாரும் களிப்ப.
(3) மேனி அசும்பு நாற என்ப; அசும்பு - துளி.
(4) மும்மைத் தமிழ் - முத்தமிழ்; மும்மை - மூன்று; தெரிமாண்டமிழ்மும்மைத் தென்னம் பொருப்பன்” (குறள், 23, பரி. மேற்.)
391. (அடி, 1) நளினத் தொட்டில் - சரவணப் பொய்கையிலுள்ள தாமரைப் பூவாகிய தொட்டில்; “பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல்” (பரி. 5 : 49); ”சரவணப் பூந்தொட்டிலேறி” (கந்தரலங்காரம், 5.) கைத்தாயர் - கார்த்திகைப் பெண்கள்.
(1-2) முகத்தும் மார்பகத்தும் உதைந்து. குறும்பு - விளையாட்டு. ஓச்ச -அடித்தற்கு ஓங்க.
|