பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்293

நெக்குப் பசுந்தே னசும்பூற
    நெடுவெண் ணிளவு விரிந்தகுறு
முறுவ லரும்புஞ் செங்கனிவாய்
    முத்தந் தருக முத்தமே
மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி
   முருகா முத்தந் தருகவே.    
(2)

392.
பொழியுங் கருணைப் பெருவெள்ளப் 
    புணரி பெருகி நலையெறியப் 
பொங்கி யெழுந்த பெருங்காதற்
    புளகம் போர்ப்பப் போதுசெயும்
விழியு மனமுங் குளிர்தூங்க
    விரநீர்ச் சடிலத் தொருவனிரு
வீணைக் குதவுந் திருச்செவிகள்
    விருந்தா டயர விரைகொழிந்து
வழியுங் கொழுந்தேன் பிழிந்திட்டு
    மதுர வமுது குழைத்தூற்றும்
மழலை ததும்பப் பழமறையை
    வடித்துத் தெளித்த வார்த்தயொன்று
மொழியும் பவளச் செங்கனிவாய்
    முத்தந் தருக முத்தமே
மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி
    முருகா முத்தந் தருகவே.    
(3)

393.
கலைப்பா னிரைந்த முதுக்குறவிற்
    கல்விச் செல்வர் கேள்விநலம்
கனியக் கனிய வமுதூறும்
    கடவுண் மறையு முதற்சங்கத்

    (2-4) ஓச்சக் குறுமுறுவல் அரும்பும் என்க.

    392. (அடி, 1-2.) புணரி - கடல். புளகம் - உரோம்ம் சிலிர்த்தல். போதுசெயும் விழியும் - இராப்போதையும் பகற்பொழுதையும் செய்யும் சந்திர சூர்யராகிய விழிகளும் (547.) விரிநீர் - கங்கை. ஒருவன் - சிவபெருமான். வீணாக்கு - வீணையின் இசைக்கு; வீணைக் குதவும் திருச்செவிகள்: 4-ஆம் செய்யுளின் குறிப்பைப் பார்க்க.

    (2-4) செவிகள் விருந்தாட்டயர வார்த்தை ஒன்று மொழியும் என்க.

    393. (அடி, 1) கலைப்பால் - கலையின் பகுதிகள். நிறைந்த செல்வர். மறை கேட்கப்படுவதாதலின் கேள்விநலங் கனியக் கனிய அமுதூறுவதென்றார்.