| தலைப்பா வலர்தீஞ் சுவைக்கனியும் | | தண்டே னறையும் வடித்தெடுத்த | | சாரங் கனிந்தூற் றிருந்தபசுந் | | தமிழு நாறத் தடங்கரைகொல் | | அலைப்பாய் புனற்றெண் கடல்வைப்பும் | | அகிலாண் டமும்பன் முறையீன்றும் | | அழகு முதிர முதிராவென் | | அம்மை யமுது சூற்கொண்ட | | முலைப்பா னாறுஞ் செங்கனிவாய் | | முத்தந் தருக முத்தமே | | மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி | | |
394. | புயலுண் டிருண்ட கொந்தளமும் | | பொன்னங் குழையு மின்னகையும் | | புளகம் பொதிந்த விளமுலையும் | | புருவச் சிலையும் போர்த்தடங்கட் | | கயலுங் கலப மயிலியலும் | | கன்னிப் புனத்தோர் பெண்ணமுதின் | | காமர் நலனும் பன்னிரண்டு | | கண்ணான் முகந்துண் டின்னமுதின் |
(1-2) முருகக் கடவுள் முதற்சங்கத்திலிருந்து தமிழாராய்ந்தவரென்பது கருதி இது கூறினார் (375.) பாவலர் தமிழும், மறையும் தமிழும் நாற.
(3) தெண்கடல் வைப்பு - பூமி.
(3-4) முதிரா முலை.
394 (அடி, 1) கன்னிப் புனத்தோர் பெண்ணமுதின் (அடி, 2) கொந்தள முதலியன வென்று கூட்டி யுரைக்க. கொந்தளம் - கூந்தல்; இது குந்தளமெனவும் வழங்கும்.
(2) பெண்ணமுது - வள்ளிநாச்சியார்.
(1-2) பன்னிரண்டு திருவிழிகளுக் கேற்பக் கூந்தல், இரண்டு குழைகள், நகை, இரண்டு நகில்கள், இரண்டு புருவங்கள், இரண்டு கண்கள், மென்மை, அழகென்னும் பன்னிரண்டும் கூறப்பட்டன.
|