| இயலுஞ் சுவைநல் லவியொடுநீத் | | தேக்கற் றிருந்தத் தாக்கணங்கின் | | இழுமென் குதலை கனிந்தூறும் | | இதழ்ந்தேன் சுவைகண் டேமாப்பான் | | முயலுங் குமுதக் கனிவாயால் | | முத்தந் தருக முத்தமே | | மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி | | |
வேறு 395. | கோடுபடு கொங்கைக் குவட்டுக் கிளித்திட்ட | | கொடியிடைக் கடைசியர்குழாம் | | குரவையிடு துழனியிற் கொண்டறிரை யத்ததாவு | | குழவுப் பகட்டுவாளை | | சேடுபடு புத்தே ணிலத்துப் புனிற்றிளஞ் | | சேதா வயிற்றுமுட்டச் | | சேங்கன் றெனத்தவு மடிமடை திறந்தூற்று | | தீம்பால் சினைக்கற்பகத் | | தேடுபடு தடமலர்த் தேனருவி யொடுசொரிந் | | தேரியொடு கானிரம்ப | | இழிதுபடு கழனியுந் நெய்வமண நாறவேன் | | றின்சுவை முதிர்ந்துவிளையும் | | காடுபடு செந்நெல்பைங் கன்னனிகர் புள்ளூர | | கனிவாயின் முத்த மருளே | | கங்கைக்கு நெடியவன் றங்கைக்கு மொருமகன் | | |
(3) அவி - தேவருணவு. ஏக்கற்று - ஆசையால் தாழ்ந்து. ஏமாப்பான் - இன்பமடையும் பொருட்டு.
395. (அடி, 1) கோடு - யானைக்கொம்பு. குரவை - குரவைப்பாட்டு; இது குலவையென வழங்கும். துழனி - ஆரவாரம். திரைய - சுருள.
(2) சேதா - காமதேனு. சேங்கன்று - காளைக்கன்று. தட என்றது தடவு என நின்றது; தட - பெருமை.
(3) கால் - வாய்க்கால். இழுதுபடு - சேறாகின்ற. கழனி - வயல்.
(4) கன்னல் - கரும்பு.
|