பக்கம் எண் :

298குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கதிரு மதியு மொளிர வொளிரும்
    ஒளிய வளிய கற்பகக்
கனியி னினிய வுருவ பருவ
    மழையி னுதவு கைத்தல
முதிரு மறிவி லறிஞ ருணரு
    முதல்வ தருக முத்தமே
  முனிவர் பரவு பருதி புரியின்
    முருக தருக முத்தமே.    
(9)

399.
வடிவி னழகு மெழுத வரிய
    புயமு நறிய செச்சையும்
மருமம் விரவு குரவு மரையின்
    மணியு மணிகொள் கச்சையும்
கடவு மயிலு மயிலு மொழுகு
    கருணை வதன பற்பமும்
கமல விழியும் விழியு மனமும்
    எழுதி யெழுதி நித்தலும்
அடிக ளெனவு னடிகள் பணியும்
    அடிய ரலது மற்றும்வே
றமரர் குழுவு மகில மறையும்
    அரியு மயனு முற்றுநின்
முடியு மடியு முணர வரிய
    முதல்வ தருக முத்தமே
  முனிவர் பரவு மருதி புரியின்
    முருக தருக முத்தமே.    
(10)

    (3) ஒளிய - ஒளியை யுடையாய். அளிய - அளிதலையுடைய. கற்பகக் கனியினில் இனிய உருவ: 366-ஆம் செய்யுளின் குறிப்பைப் பார்க்க.

    (4) அறிஞர் அறிவில் உணருமென்க.

    399. (அடி, 1) செச்சை - வெட்சிமலர். மருமம் - மார்பு. குரவு - குரா மலர். அரையின் மணி - உடைமணி.

    (2) கடவும் - செலுத்தும். மயிலும் அயிலும்; அயில் - வேல். விழியிலும் மனத்திலும் எழுதி எழுதி.

    (3) அடிகள் - ஸ்வாமி.

    (3-4) அடியரலது ஏனையோரால் அறிதற்கரிய முதல்வ.