6. வருகைப் பருவம் 400. | செம்பொற் கருங்கழ லரிக்குரற் கிண்கிணி | | சிலம்பொடு கலின்கலினெனத் | | திருவரையி லரைமணி கிணின்கிணி னெனப்பொலந் | | திண்டோளின் வளைகலிப்ப | | அம்பொற் பகட்டுமார் பிற்சன்ன வீரமும் | | ஆரமுந் நிருவில்வீச | | அணிமகர குண்டலம் பருதிமண் டலமென்ன | | அலர்கதிர்க் கற்றைசுற்றப் | | பைம்பொற் சுடர்ச்சுட்டி கட்டுசூ ழியமுடன் | | பட்டமொளி விட்டெறிப்பப் | | பங்கய மலர்ந்ததிரு முகமண் தலந்தொறும் | | பனிமுறுவ னிலவரும்பக் | | கும்பப் படாமுலை மலைப்புதல்வி செல்வக் | | குமாரநா யகன்வருகவே | | குரவுகமழ் தருகந்த பொரியிலருள் குடிகொண்ட | | |
401. | மழவுமுதிர் கனிவாய்ப் பசுந்தேறல் வெண்டுகில் | | மடித்தல நனைப்பவம்மை | | மணிவயிறு குளிரத் தவழ்ந்தேறி யெம்பிரான் | | மார்பினிற் குரவையாடி |
400. (அடி, 1) அரிக்குரல் - தவளையின் குரலைப்போன்ற குரல். கலிப்ப - முழங்க.
(2) பகடு - பெருமை. சன்னவீரம் - வீரசங்கிலி (தக்க. 341.) திருவில் - இந்திரவில்லின் ஒளி.
(3) பட்டம் - நெற்றிப்பட்டம்.
(4) முருகக் கடவுளுக்கு விருப்பமுடையதாதலின் குரவு கமழ்தரு கந்தபுரி யென்றார்; குரா - ஒரு மரம்.
(முடிபு.) கலின்கலினென என்பது முதலிய எச்சங்கள் வருக வென்பதனோடு முடிந்தன.
401. முருகக் கடவுள் சிவபெருமான் திருமேனியின்மீது இவர்ந்து அங்குள்ள பொருள்களோடு சிறுவிளையாடல்கள் செய்வது கூறப்படும்.
(அடி, 1) மழவு - இளமை. வாய்த்தேறல் :14. தேறல் - தேன்; குரவை - ஒருவகைக் கூத்து.
|